குருகஜகேசரி யோகம்: தொட்டதெல்லாம் தங்கமா மாறும் ராசிகள்.. பண மழை கொட்ட வரும் குரு சந்திரன்.. 3 ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருகஜகேசரி யோகம்: தொட்டதெல்லாம் தங்கமா மாறும் ராசிகள்.. பண மழை கொட்ட வரும் குரு சந்திரன்.. 3 ராசிகள் யார்?

குருகஜகேசரி யோகம்: தொட்டதெல்லாம் தங்கமா மாறும் ராசிகள்.. பண மழை கொட்ட வரும் குரு சந்திரன்.. 3 ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 26, 2025 04:36 PM IST

Zodiac Signs: குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைந்து உருவாக்கிய சக்தி வாய்ந்த கஜகேசரி யோகம் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத்தரப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குருகஜகேசரி யோகம்: தொட்டதெல்லாம் தங்கமா மாறும் ராசிகள்.. பண மழை கொட்ட வரும் குரு சந்திரன்.. 3 ராசிகள் யார்?
குருகஜகேசரி யோகம்: தொட்டதெல்லாம் தங்கமா மாறும் ராசிகள்.. பண மழை கொட்ட வரும் குரு சந்திரன்.. 3 ராசிகள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இது மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர பகவான் ரிஷப ராசியில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த இரண்டு கிரகங்கள் சேர்ந்து சக்தி வாய்ந்த கஜகேசரி யோகத்தை உருவாக்கியுள்ளன.

குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைந்து உருவாக்கிய சக்தி வாய்ந்த கஜகேசரி யோகம் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத்தரப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

கஜகேசரி ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் அரசியல் பன்னிரண்டாவது வீட்டில் குரு மற்றும் சந்திரன் உருவாக்கிய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கணிசமான அளவு பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த நிதி நிலைமையில் நல்ல மேம்பாடு இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

கஜகேசரி ராஜயோகம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் சந்திர பகவான் இந்த ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர்.

இதனால் திடீர் நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. பயனுள்ள திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

மகர ராசி

கஜகேசரி ராஜயோகம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் தடைகள் அனைத்தும் விலகும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner