Basant Panchami 2025: நாளை கோடிகள் கொட்டும் வசந்த பஞ்சமி.. சனி ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Basant Panchami 2025: நாளை கோடிகள் கொட்டும் வசந்த பஞ்சமி.. சனி ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது?

Basant Panchami 2025: நாளை கோடிகள் கொட்டும் வசந்த பஞ்சமி.. சனி ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது?

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2025 03:04 PM IST

Basant Panchami 2025: வசந்த பஞ்சமி மற்றும் சனி நட்சத்திர பெயர்ச்சி மூலம் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Basant Panchami 2025: நாளை கோடிகள் கொட்டும் வசந்த பஞ்சமி.. சனி ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது?
Basant Panchami 2025: நாளை கோடிகள் கொட்டும் வசந்த பஞ்சமி.. சனி ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது?

இது போன்ற போட்டோக்கள்

இந்த வசந்த பஞ்சமி திருநாளானது சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு மிகவும் சிறப்பான நாள் என கருதப்படுகிறது. கல்வி, படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் உள்ளிட்டவைகளை வழிபாடு மூலம் பெறுவதற்கு சிறப்பான நாள் என கருதப்படுகிறது.

இந்த வசந்த பஞ்சமி திருநாளானது சரஸ்வதி தேவியின் அவதார நாள் எனக் கூறப்படுகிறது. இந்த திருநாள் சரஸ்வதி பஞ்சமி வசந்த பஞ்சமி சரஸ்வதி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வசந்த பஞ்சமித் திருநாள் பிப்ரவரி இரண்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அதேசமயம் சனி பகவான் தனது நட்சத்திர இடமாற்றத்தை பிப்ரவரி இரண்டாம் தேதி செல்கின்றார். சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் நாளை நுழைகின்றார். இந்நிலையில் வசந்த பஞ்சமி மற்றும் சனி நட்சத்திர பெயர்ச்சி மூலம் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மீன ராசி

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக கருதப்படுகிறது. மேலும் வசந்த பஞ்சமி யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் பணவரவு உண்டாகும் என கூறப்படுகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. சேமிப்பு மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்ப ராசி

சனிபகவான் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசந்த பஞ்சமியின் செல்வ யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வத்தின் வரவால் உங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மனக்குழப்பத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சியான பயணம் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

வசந்த் பஞ்சமி திருநாளில் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை உண்டாக்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக உங்களுக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் அனைத்தும் வெற்றியை தேடி தரும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களுக்கு நன்மை செய்தால் உங்களுக்கு இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இலக்கை நோக்கிய பயணங்களுக்கு வெற்றியை தேடி தரும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner