அனுமன் பஞ்சகிரக யோகம்: 57 ஆண்டுகளுக்குப் பிறகு.. பண மழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. மீன ராசியில் 5 கிரகங்கள்!
Pancha Graha Yoga: மீன ராசியில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணிக்கின்ற காரணத்தினால் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர்.

Hanuman Jayanti: ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்களுக்கு ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு பண்டிகை ஒரு ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் அனுமன் ஜெயந்தி மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
அதாவது வட இந்தியாவில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பங்குனி பௌர்ணமி திருநாளான இன்று வட இந்தியாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி திருநாளான இன்று ஜோதிட சாஸ்திரத்தின் படி பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு என ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணம் செய்கின்றனர்.
மீன ராசியில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து பயணிக்கின்ற காரணத்தினால் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| ராகு பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
ரிஷப ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க| சூரியன் கொட்டும் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்
மிதுன ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாக்கி உள்ளது அனுமன் ஜெயந்தி திருநாளில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க| சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்
கடக ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பஞ்சகிரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. பணம் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
