Ruchka Rajyog: அடிச்சது ருச்சக ராஜயோகம் லக்.. இந்த ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி கொட்டும்.. செவ்வாய் விருச்சகத்தில்..!
Ruchka Rajyog: செவ்வாய் பகவானின் விருச்சிக ராசி பயணத்தால் உருவாகும் இந்த ருச்சக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டசாலியாக மாறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என இங்கே காணலாம்.

Ruchka Rajyog: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தளபதி பதவியை வகித்து வருபவர் செவ்வாய் பகவான். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் தனது ஒரு ராசி சுழற்சியை முடிப்பதற்கு 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Feb 17, 2025 05:00 AMToday Rasipalan : 'மகிழ்ச்சியா இருங்க.. உழைப்பு வீண் போகாது.. நம்பிக்கை முக்கியம்' இன்று பிப்ரவரி 17 ராசிபலன் இதோ!
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
அந்த வகையில் செவ்வாய் பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான விருச்சகத்தில் நுழைவது ருச்சக யோகத்தை உருவாக்கப் போகின்றது. இது மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகம் என கருதப்படுகிறது. 22 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ராஜயோகம் உருவாகும் என கூறப்படுகிறது.
பஞ்ச மகா புருஷ ராஜ யோகங்களில் இந்த ருச்சக ராஜயோகமும் ஒன்று என கூறப்படுகிறது. செவ்வாய் பகவானின் விருச்சிக ராசி பயணத்தால் உருவாகும் இந்த ருச்சக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டசாலியாக மாறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என இங்கே காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மிதுன ராசி
செவ்வாய் பகவான் விருச்சக ராசியில் நுழையும் பொழுது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கமான எதிர்பார்க்கப்படுகிறது.
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் பெரிய வெற்றிகள் அடையுமெனக் கூறப்படுகிறது. குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது.
கன்னி ராசி
செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நுழையப்போவதாக கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வீரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் என கூறப்படுகிறது.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்க நினைத்தால் அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும் எனக் கூறப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு முன்னேற்றம் அடைவதற்கான சூழ்நிலைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும் என கூறப்படுகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
விருச்சிக ராசி
செவ்வாய் பகவான் ஆளும் கிரகமாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள். உங்கள் ராசியில் புகுந்து ருச்சக ராஜயோகத்தை செவ்வாய் பகவான் உருவாக்குகின்றார். இதன் முழு ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
வேலையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
