பத்ர மாளவ்ய யோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகள் மீது பணமழை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பத்ர மாளவ்ய யோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகள் மீது பணமழை!

பத்ர மாளவ்ய யோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகள் மீது பணமழை!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 11, 2025 12:52 PM IST

Bhadra Malavya Raja Yoga: பத்ர ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் இந்த இரண்டு ராஜயோகங்களும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ஜூன் மாதத்தில் உருவாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது.

பத்ர மாளவ்ய யோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகள் மீது பணமழை!
பத்ர மாளவ்ய யோகம்: 100 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மாளவ்ய ராஜயோகம்.. 3 ராசிகள் மீது பணமழை!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் ஜூன் மாதத்தில் ராஜயோகம் ஒன்று உருவாக உள்ளது. நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் தனது சொந்தமான ராசியான மிதுன ராசியில் புகுந்து பத்ர யோகத்தை உருவாக்க உள்ளார். அதே சமயம் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் ரிஷப ராசிகள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றார்.

பத்ர ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் இந்த இரண்டு ராஜயோகங்களும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ஜூன் மாதத்தில் உருவாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

ஒரே நேரத்தில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்தை காண்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக இருக்கும் என கூறப்படுகிறது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி

100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

ஒரே நேரத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner