Rasipalan: இன்று கோடிகளோடு சுக்கிரன் இணைகிறார்.. ராகு ராசியில் பணமழை.. மூச்சு முட்ட ஆனந்தம் கொட்டும் ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: இன்று கோடிகளோடு சுக்கிரன் இணைகிறார்.. ராகு ராசியில் பணமழை.. மூச்சு முட்ட ஆனந்தம் கொட்டும் ராசிகள் யார்?

Rasipalan: இன்று கோடிகளோடு சுக்கிரன் இணைகிறார்.. ராகு ராசியில் பணமழை.. மூச்சு முட்ட ஆனந்தம் கொட்டும் ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jan 28, 2025 10:38 AM IST

Rasipalan: மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் ஒரு சிலர் ராசிகள் பணக்கார யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இன்று கோடிகளோடு சுக்கிரன் இணைகிறார்.. ராகு ராசியில் பணமழை.. மூச்சு முட்ட ஆனந்தம் கொட்டும் ராசிகள் யார்?
இன்று கோடிகளோடு சுக்கிரன் இணைகிறார்.. ராகு ராசியில் பணமழை.. மூச்சு முட்ட ஆனந்தம் கொட்டும் ராசிகள் யார்?

இது போன்ற போட்டோக்கள்

ராகுபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் ராகு பகவானோடு இன்று சுக்கிர பகவான் இணைகின்றார். 

மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் ஒரு சிலர் ராசிகள் பணக்கார யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மேஷ ராசி

ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை மூலம் உங்களுக்கு பணக்கார யோகம் கிடைத்துள்ளது. இதனால் உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

ரிஷப ராசி

ராகு மற்றும் சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்க போகின்றனர். இவர்களுடைய சேர்க்கை உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரப்படுகிறது. இன்று முதல் உங்களுக்கு யோகம் ஆரம்பம். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல ஆதரவை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

மகர ராசி

சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் யோகம் கிடைக்கும். வாழ்க்கை துணை ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.