குரு பலன்கள்: 1 ஆண்டு கழித்து கொட்டப் போகும் பணமழை.. குரு பெயர்ச்சி ராசிகள் இவர்கள்தான்.. நீங்க இருக்கீங்களா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பலன்கள்: 1 ஆண்டு கழித்து கொட்டப் போகும் பணமழை.. குரு பெயர்ச்சி ராசிகள் இவர்கள்தான்.. நீங்க இருக்கீங்களா?

குரு பலன்கள்: 1 ஆண்டு கழித்து கொட்டப் போகும் பணமழை.. குரு பெயர்ச்சி ராசிகள் இவர்கள்தான்.. நீங்க இருக்கீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 09, 2025 02:30 PM IST

Guru Transit: குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பலன்கள்: 1 ஆண்டு கழித்து கொட்டப் போகும் பணமழை.. குரு பெயர்ச்சி ராசிகள் இவர்கள்தான்.. நீங்க இருக்கீங்களா?
குரு பலன்கள்: 1 ஆண்டு கழித்து கொட்டப் போகும் பணமழை.. குரு பெயர்ச்சி ராசிகள் இவர்கள்தான்.. நீங்க இருக்கீங்களா?

இது போன்ற போட்டோக்கள்

இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். அப்போது புதன் பகவானின் மிதுன ராசிக்கு குருபகவான் செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் மேஷம் முதல் மீன ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆளுமை திறமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. திருமண வரன்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துலாம் ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணங்களால் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. திறமையால் உங்களுக்கு நல்ல உயரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து தடைகளும் உங்களுக்கு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிறைய தொண்டுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

குருபகவான் இந்த ஆண்டு இடமாற்றம் செய்யும்பொழுது உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்கு வருகின்றார். அதனால் பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் எனும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல வழிகளில் இருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து தடைகளும் உங்களுக்கு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner