சந்திர பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகம் உருவானது.. இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை கொட்டுமாம்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சந்திர பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகம் உருவானது.. இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை கொட்டுமாம்..!

சந்திர பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகம் உருவானது.. இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை கொட்டுமாம்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 13, 2025 11:45 AM IST

Mahalakshmi Rajayoga: செவ்வாய் மற்றும் சந்திரன் இருவரும் மிதுன ராசியில் நுழைந்த காரணத்தினால் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜ யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது.

சந்திர பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகம் உருவானது.. இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை கொட்டுமாம்..!
சந்திர பெயர்ச்சி: மகாலட்சுமி ராஜயோகம் உருவானது.. இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை கொட்டுமாம்..!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரனையாக திகழ்ந்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சந்திர பகவான் மிதுன ராசியில் நுழைந்தார்.

செவ்வாய் மற்றும் சந்திரன் இருவரும் மிதுன ராசியில் நுழைந்த காரணத்தினால் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகியுள்ளது. இந்த மகாலட்சுமி ராஜ யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வேலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைப் பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது. நிதி ஆதாயங்களை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கிக் கடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் எனக் கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று திரும்பின எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வங்கி இருப்பு உங்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நிதி நிலை உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று திரும்பின எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner