புதனுதய யோகம்: கொஞ்சம் உஷாரா இருங்க.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்ட ராசிகள்.. புதன் உதயம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புதனுதய யோகம்: கொஞ்சம் உஷாரா இருங்க.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்ட ராசிகள்.. புதன் உதயம்!

புதனுதய யோகம்: கொஞ்சம் உஷாரா இருங்க.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்ட ராசிகள்.. புதன் உதயம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 26, 2025 03:05 PM IST

புதனுதய யோகம்: புதன் பகவான் மீன ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது.

புதனுதய யோகம்: கொஞ்சம் உஷாரா இருங்க.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்ட ராசிகள்.. புதன் உதயம்!
புதனுதய யோகம்: கொஞ்சம் உஷாரா இருங்க.. பணமழை கொட்டும்.. அதிர்ஷ்ட ராசிகள்.. புதன் உதயம்!

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். அதேசமயம் மார்ச் 17ஆம் தேதி அன்று அஸ்தமன நிலையில் புதன் பகவான் பயணித்து வருகின்றார். இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமாகின்றார்.

புதன் பகவான் மீன ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் தொழில் ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் உங்கள் ரசிகர்கள் ஐந்தாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி தேடி வரும் என்று கூறப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பாராத நிதி ஆதாரங்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. தொழில் சிக்கு கடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner