எதிர்மறை சக்திகளை விரட்ட தூபம் போட வேண்டும்!
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்ட வாரம் மூன்று முறை சாம்பிராணி தூபம் போட வேண்டும்.

நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளால் நமக்கு பல தீங்குகள் நடக்கின்றன. வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதனை வாழ வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நன்மையும் தீமையும் கலந்ததுதான் வாழ்க்கை, சுற்றியிருக்கும் நன்மைகளின் தாக்கத்தின் பரவல் என்பது குறைவாக இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
ஆனால் தீமைகளின் தாக்கம் உடனே பரவும். இது போன்ற எதிர்மறை சக்திகள் பரவாமல் இருப்பதற்காக நமது வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். நல்ல நறுமணம் நல்ல மனநிலையையும், நல்ல சுற்றத்தையும் கொடுக்கும்.
எதிர்மறை சக்திகளை போக்கும் தூபம்
நெருப்புக் கங்குகளில் சாம்பிராணி போட்டு தூபம் காட்டுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், தாமரை விதை, காய்ந்துபோன ஆவாரம் பூ, வெள்ளை குங்கிலியம் ஆகிய மூன்று பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.
சாதாரண முறையில் தூபம் போடும் போது இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சாம்பிராணி போட்டு வீடு முழுக்க தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் துஷ்ட சக்திகளின் செயல்பாடு அறவே இருக்காது.
இந்த தூபத்தை, வாரத்தின் முக்கியமான நாட்களான திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் போடலாம். வீட்டில் எப்போதும் சிக்கல், கஷ்டம், மந்தநிலை, அசுப காரியங்கள் போன்றவை நடந்தால் தூபம் போட்டு இது போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்யுங்கள்.
வீட்டில் இருக்கும் போது நம்மைச் சுற்றி ஏதேனும் வித்தியாசமான செயல்கள் நடந்து கொண்டே இருந்தால், தனிமையாக இருப்பது போல் உணர்ந்தால் தூபம் காட்டி வீடு முழுக்க இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டும். அதேபோல் பலர் நம் முன்னேற்றத்தைக் கண்டு பல துஷ்ட சக்திகளை நம் மீது ஏவி விடுவார்கள். அவையெல்லாம் வராமல் இருக்க வீட்டில் தூபம் போடுவது அவசியமாகும்.
