Tamil New Year 2025: பிறந்துவிட்டது சித்திரை.. விசுவாவசு நல்ல காலம்.. தமிழ் புத்தாண்டின் பாரம்பரியம்.. ஆரம்பிக்கலாமா?
Tamil New Year 2025: சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் சித்திரை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் அப்போதுதான் பிறக்கின்றது. தமிழ் மாதங்களின்படி சித்திரை மாதம் முதல் மாதமாக கருதப்படுகிறது. அந்த நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

Tamil New Year: தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகை தினங்களில் தமிழ் புத்தாண்டு மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பொதுவாக ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளுக்கு பிறகு வரக்கூடிய திருநாளாக தமிழ் புத்தாண்டு திகழ்ந்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் சித்திரை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் அப்போதுதான் பிறக்கின்றது. தமிழ் மாதங்களின்படி சித்திரை மாதம் முதல் மாதமாக கருதப்படுகிறது. அந்த நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
மேலும் படிங்க| சனி யோகத்தில் நனைய போகும் ராசிகள் இவர்கள் தான்
தமிழ் புத்தாண்டு முக்கியத்துவம்
தமிழ் புத்தாண்டு பண்டிகை ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசுமை மற்றும் நலத்தை வரவேற்கும் நாளாக கருதப்படுகிறது. தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சாஸ்திரங்களிலும் தமிழ் புத்தாண்டு மிக முக்கிய நாளாக கொண்டாடுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தமிழ் புத்தாண்டை தமிழர்கள், குடும்ப ஒற்றுமை, ஆன்மீகம் மற்றும் தங்களது நம்பிக்கைகளோடு இணைத்து பார்த்துள்ளனர். இயற்கையின் சுழற்சி மனித வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தும் நாளாக இந்த தமிழ் புத்தாண்டு திகழ்ந்து வருகின்றது.
சூரிய பகவான் மேஷ ராசியின் நுழைவதை புத்தாண்டில் தொடக்கமாக முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். விவசாயம் செய்யக்கூடிய காலத்தின் தொடக்கமும் இதுதான் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த திருநாளை விவசாயத்தோடு ஒப்பிட்டு பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.
மேலும் படிங்க| சனி சூரிய பெயர்ச்சி பணக்கார யோகத்தை பெறுகின்றார் ஆசிகள்
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ் புத்தாண்டு திருநாளில் அதிகாலை எழுந்து வீடு முழுவதும் சுத்தம் செய்துவிட்டு, பூக்களால் அலங்காரம் செய்து, பூக்கோலம் இட்டு, விளக்கேற்றி இறைவனை வழிபாடு செய்து கொண்டாடுகின்றனர். புத்தாடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை அனைவரும் வெளிப்படுத்திகின்றனர்.
அதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி வயதில் மூத்தவர்களிடம் ஆசி பெற்று கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்கின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு நாட்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில இடங்களில் பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
பண்டிகைகள் என்றாலே உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த தமிழ் புத்தாண்டு திருநாளில் சிறப்பு வகை உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. அனைத்து சுவைகளையும் ஒன்று திரட்டி புத்தாண்டு பச்சடி என்று சில இடங்களில் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது வாழ்க்கையின் அனுபவத்தை வெளிப்படுத்தும் சின்னமாக கருதப்படுகிறது.
மேலும் படிங்க| ராகு பெயர்ச்சி பலன்களை முழுமையாக அனுபவிக்கும் ராசிகள்
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனம், இசை, நாடகங்கள் என கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் புத்தாண்டு சம்பிரதாயத்திற்காக கொண்டாடப்படும் நிகழ்வு கிடையாது. இது பாரம்பரியம், குடும்பம், ஆன்மீகம், வாழ்வியல் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்த மிகப்பெரிய பண்டிகை எனக் கூறப்படுகிறது. மக்களின் வாழ்வியலோடு ஒத்துப் போகும் கலாச்சார திருவிழாக்களில் தமிழ் புத்தாண்டு மிகப்பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது.
