Kambakareswarar: நரசிம்மரோடு போர்.. சரபேஸ்வரர் அவதாரம்.. கம்பஹரேஸ்வரர் திருக்கோயில்..!
Kambakareswarar: சிவபெருமான் லிங்க வடிவில் கம்பஹரேஸ்வரராக காட்சி கொடுத்து வருகிறார். மூர்த்தி வடிவில் சரபேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். சிவபெருமான் கோயில்களில் மிகவும் பிரம்மாண்ட கோயிலாக இது திகழ்ந்து வருகின்றது.

Kambakareswarar: தென்னாட்டில் சிவபெருமான் குடி கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த கோயில்களின் திருபுவனம் சிவபெருமான் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமான் லிங்க வடிவில் கம்பஹரேஸ்வரராக காட்சி கொடுத்து வருகிறார். மூர்த்தி வடிவில் சரபேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். சிவபெருமான் கோயில்களில் மிகவும் பிரம்மாண்ட கோயிலாக இது திகழ்ந்து வருகின்றது. இந்த கோயிலில் ஏராளமான சிற்ப வேலைபாடுகள் காணப்படும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
தல வரலாறு
மிகவும் தீவிர சிவபெருமான் பக்தரான அரக்கர் இனத்தைச் சேர்ந்த ஹிரண்யகசிபு மகாவிஷ்ணு மீது கடுமையான பகை கொண்டிருந்தார். நாராயணா என்ற பெயரை யாரேனும் துதி பாடினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று கட்டளையிட்டிருந்தார். அவருக்கு மகனாக பிறந்த பிரகலாதன் தந்தை ஹிரண்யகசிபு கட்டளையை மீறி மகாவிஷ்ணுவின் தீவிர பக்த நாகத் திகழ்ந்து வந்தார்.
இதனால் கோபமடைந்த ஹிரண்ய கசிபு எப்போதும் நாராயணனின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் தனது மகன் பிரகலாதனை பல வழிகளில் கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் மகாவிஷ்ணுவின் அருளால் அவர் உயிர் தப்பித்துக் கொண்டே இருந்தார்.
மேலும் படிக்க| தரித்திரம் பிடித்து கஷ்டப்படப் போகும் ராசிகள் இவர்கள்தான்
பக்தனை தொந்தரவு செய்து கொண்டிருந்த ஹிரண்யகசிபுவின் இறுதி நேரம் நெருங்கி விட்டது எனக் கூறி தூணில் இருந்து நரசிம்மர் அவதாரத்தில் மகாவிஷ்ணு உதித்தார். கூறிய நகங்களால் கிழித்து ஹிரண்ய கசிபுவை வதம் செய்தார்.
அதற்குப் பிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. உலகத்தையே அழிக்கத் தொடங்கினார். தேவர்கள் அனைவரும் பயந்து சிவபெருமானை நோக்கி தஞ்சம் அடைந்தனர். விஷ்ணு பகவானின் உக்கிரத்தை தணிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
சிவபெருமான் தேவர்களின் வேண்டுதல்களை ஏற்று பிரபஞ்சமே அஞ்சு நடுங்கும் அளவிற்கு பாதி உடல் யாழியாகவும் பாதி உடல் பட்சியாகவும் அபூர்வ தோற்றத்தோடு சரபேஸ்வரராக உருவம் எடுத்தார். நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்கும் கடுமையான போர் ஏற்பட்டது. சரபேஸ்வரரின் இறக்கைகளிலிருந்து பத்ரகாளி வெளிப்பட்டு நரசிம்மரின் கோபத்தை தானே ஏற்று ஜீரணித்து கொண்டாள். அதன் பின்னர் நரசிம்மர் கோபம் தீர்ந்தது.
இந்த தல வரலாற்றைக் கொண்டு சரபேஸ்வரருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சன்னதியில் அறம் வளர்த்த நாயகி காட்சி கொடுத்து வருகின்றார். உடன் கம்பஹரேஸ்வரரும் காட்சி கொடுத்து வருகிறார்.
மேலும் படிங்க| புதன் உதயம் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் தனி சன்னதியில் சரபேஸ்வரர் எழுந்தருளி காட்சி கொடுத்து வருகிறார். யாழி உடல், பறவையின் தலை கொண்டு சரபேஸ்வரர் காட்சி கொடுத்த வருகிறார்.
வேண்டுதல்கள்
தீயவர்களின் பயத்தால் அச்சப்படுபவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் எதிரிகளால் துன்பப்பட கூடியவர்கள், ஊழ்வினையால் சிக்கல்களை அனுபவிக்க கூடியவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. சகலதோஷங்களையும் நீக்கும் சரபேஸ்வரராக இவர் திகழ்ந்த வருகின்றார்.
மேலும் படிங்க| இரட்டை ராஜயோகம் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்
பரிகாரங்கள்
ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ராகு காலத்தில் சரபேஸ் சன்னதி வாசலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
போகும் வழி
கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து இந்த கோயிலுக்கு செல்ல சிற்றுந்து மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
