படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!

படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 10, 2025 06:00 AM IST

தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ சிறப்பு மிகுந்த முருக பெருமான் கோயில்களில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்.

படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!
படைப்பு தொழிலை கைப்பற்றிய முருக பெருமான்.. கந்தபுராணம் அரங்கேற்றம்.. குமரக்கோட்டம் கோயில்!

இது போன்ற போட்டோக்கள்

தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ சிறப்பு மிகுந்த முருக பெருமான் கோயில்களில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்.

தல சிறப்புகள்

இந்த திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கந்த சஷ்டி திருவிழாவின் போது இந்த கோயிலை 108 முறை சுற்றி வந்தால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நாக ஸ்கந்த வழிபாட்டிற்கு இந்த திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்து வருகின்றது. முருகப்பெருமானை வழிபட்டால் திருமண தடை மற்றும் நாகதோஷம் அனைத்தும் விலகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

நாகக் குடையில் முருகப்பெருமான்

நாகத்தை வழிபடுவது என்பது மிகவும் தொன்மையான வழிபாடாக கருதப்படுகின்றது. இந்த நாக வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவி கிடக்கின்றன. பொதுவாக விஷ்ணு பகவானுக்கு தான் ஐந்து தலை நாகம் குடை பிடித்து அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த கோயிலில் வைத்து இருக்கும் முருகப்பெருமானுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் வள்ளி தெய்வானை ஆகியோருக்கும் மூன்று தலை நாகம் கொடை விடுகின்றது.

இந்த முருகப்பெருமானை குமரக்கோட்ட கல்யாண சுந்தரர் என அனைவரும் அழைக்கின்றனர். முக்தி தரும் தலங்களின் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக திகழ்ந்து வருகின்றது. கந்தபுராணம் இந்த கோயிலில் தான் அரங்கேறியது என கூறப்படுகிறது.

கந்தபுராணம் அரங்கேற்றம்

புராணங்களிலேயே கந்தபுராணம் மிகவும் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய முருக பெருமான் ‘திகட சக்கரம்’ என்பதை அடியெடுத்து கொடுத்து தனக்கு பூஜை செய்யும்படி கச்சியப்ப சிவாச்சாரியாரை கொண்டு கந்தபுராணம் எழுதுமாறு கூறினார் என கூறப்படுகிறது. கிபி 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேற்றிய மண்டபம் இந்த கோயிலில் இருப்பதாக கூறப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் குமர கூட்டத்திற்கு வழி தெரியாமல் தவித்த பொழுது முருகப்பெருமான் சிறுவன் வடிவில் வந்து வழிகாட்டி அவருக்கு நேரடியாக தரிசனம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தல வரலாறு

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதற்குப் பிறகு பிரம்மனின் படைப்பு தொழிலை அவரே எடுத்துக்கொண்டார். பிரம்மனின் ருத்ராட்ச மாலை மற்றும் கமண்டலம் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டு பிரம்ம சாஸ்தா கோளத்தில் படைப்பு தொழிலை முருகப் பெருமான் ஆரம்பித்தார். அவ்வாறு படைப்பு தொழிலை முருகப் பெருமான் இந்த தலத்திலிருந்தே செய்ததாக கூறப்படுகிறது. இங்கு முருக பெருமான் மேற்கு நோக்கி காட்சி கொடுத்த வருகின்றார். இந்த குமரனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு பகவான், சிவபெருமான் உள்ளிட்டவர்களை தரிசித்த பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இவர் ஒருவரின் மூவர் என விசேஷ பெயரோடு அழைக்கப்பட்டு வருகிறார்.