பார்வை இழந்த சுந்தரர்.. ஆயிரம் கால் மண்டபத்தில் சிவபெருமான்.. பஞ்சபூத நாயகன் ஏகாம்பரேஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பார்வை இழந்த சுந்தரர்.. ஆயிரம் கால் மண்டபத்தில் சிவபெருமான்.. பஞ்சபூத நாயகன் ஏகாம்பரேஸ்வரர்!

பார்வை இழந்த சுந்தரர்.. ஆயிரம் கால் மண்டபத்தில் சிவபெருமான்.. பஞ்சபூத நாயகன் ஏகாம்பரேஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 11, 2025 06:00 AM IST

பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அங்கு தான் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய கடவுளாக ஏகாம்பரேஸ்வரர் திகழ்ந்து வருகின்றார்.

பார்வை இழந்த சுந்தரர்.. ஆயிரம் கால் மண்டபத்தில் சிவபெருமான்.. பஞ்சபூத நாயகன் ஏகாம்பரேஸ்வரர்!
பார்வை இழந்த சுந்தரர்.. ஆயிரம் கால் மண்டபத்தில் சிவபெருமான்.. பஞ்சபூத நாயகன் ஏகாம்பரேஸ்வரர்!

இது போன்ற போட்டோக்கள்

பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயிலாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அங்கு தான் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். இங்கு சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் 600 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. உங்க வீட்ல இருக்கக்கூடிய சிவபெருமானை ப்ரித்வி லிங்கம் என அழைக்கின்றனர்.

மண் லிங்கம்

இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நன்னாள் ஆனவர் என கூறப்படுகிறது. இவர் சுயம்புலிங்கமாக உருவானார் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்வது கிடையாது. மாற்றாக லிங்க வடிவத்தில் இருக்கக்கூடிய ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. மற்ற கோவில்களில் இருப்பது போல இங்கு இருக்கக்கூடிய அம்மனுக்கு தனியான சன்னதி கிடையாது. இந்த கோயிலில் ஈசான மூலையில் நிலாதுண்ட பெருமாள் சன்னதி காணப்படுகிறது.

தல வரலாறு

இந்த ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் முதன்முதலில் பல்லவர்களை கட்டி இருப்பார்கள் என கூறப்படுகிறது. அதற்குச் சான்றாக பல்லவர் கால சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் இங்கு காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிற்பங்கள் பல்லவ கால சிற்பங்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சோழர்களால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு வளர்ச்சி பெற்று உள்ளது.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என நால்வராலும் பாடல் பெற்ற புகழ்பெற்ற திருக்கோயிலாக இந்த ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் விளங்கி வருகிறது. பழங்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களில் இந்த திருக்கோயில் திருக்கட்சி ஏகம்பம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த பொழுது உன்னை பிரியேன் என சிவபெருமானை சாட்சியாக வைத்து சத்தியம் செய்துள்ளார். அந்த சத்தியத்தை சுந்தரர் மீறிய காரணத்தினால் அவருடைய கண் பார்வை போனது. அதன் பின்னர் இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

உயரமான ராஜகோபுரம்

இந்த கோயிலின் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம் 58.5 மீட்டர் உயரம் மற்றும் ஒன்பது அடுக்குகள் கொண்டது. இதனை விஜய நகரத்தை ஆண்டு வந்த கிருஷ்ணதேவராயர் கிபி.1509 ஆம் ஆண்டு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய ஆயிரம் கால் மண்டபத்தையும் இவரை கட்டியனார் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் இருக்கின்றன.

பழமையான மாமரம்

இந்த கோயிலில் இருக்கக்கூடிய தல விருட்சமானது 3500 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பழமை வாய்ந்த மாமரம் தான் இங்கு தல விருட்சமாக திகழ்ந்து வருகின்றது. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் எனக் கூறப்படுகிறது. இது நான்கு வேதங்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

செல்லும் வழி

சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. பல முக்கிய பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் சென்னை விமான நிலையம் உள்ளது.