காவல் தெய்வமாக மாறிய கல்.. கோயம்புத்தூரை ஆட்சி செய்யும் கோனியம்மன்.. திருமண யோகத்தை தரும் அம்பாள்!
கோயம்புத்தூர் மாவட்டத்தை காக்கும் காவல் தெய்வமாக கோனியம்மன் விளங்கி வருகின்றார். நொய்யல் ஆற்றின் வடக்கு பகுதியில் இந்த கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல விசேஷங்களைக் கொண்ட இந்த அம்மன் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கொடுக்கும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகின்றார்.

காக்கும் கடவுளாக விளங்கக்கூடியதுதான் காவல் தெய்வம். காவல் தெய்வ வழிபாடு என்பது நமது தமிழ்நாட்டில் மிகவும் அவசியமாகவும் விசேஷமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தை காக்கும் காவல் தெய்வமாக கோனியம்மன் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
நொய்யல் ஆற்றின் வடக்கு பகுதியில் இந்த கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல விசேஷங்களைக் கொண்ட இந்த அம்மன் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கொடுக்கும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகின்றார்.
தல வரலாறு
600 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது கோயம்புத்தூர். இங்கு இருளர் இன தலைவரான கோவன் என்பவர் அந்த பகுதியை சீர்படுத்தி மக்கள் வாழும் பகுதியாக மாற்றி அமைத்துள்ளார். அதனால் அந்த இடம் கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டுள்ளது. அந்த இடம்தான் நாளடைவில் மருவி கோயம்புத்தூர் என அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். கொஞ்ச காலத்தில் அங்கு பசி மற்றும் பஞ்சம் ஏற்பட்டு அனைத்து மக்களும் கஷ்டத்தில் வாழ தொடங்கியுள்ளனர். இதனால் அந்த இருளர் இனத்தின் தலைவனாக விளங்கி வந்த கோவன், ஒரு கல்லை எடுத்து அம்பாளாக நினைத்து தனது மக்களின் பசி, பஞ்சம், பட்டினி தீர வேண்டும் எனக் கூறி வழிபாடு ஒன்றை நடத்தியுள்ளார்.
உடனே அம்பாளும், நீ என்னை நினைத்தாலே போதும் அனைத்து கஷ்டங்களையும் தீர்ப்பேன் என்று கூறி அந்த இடத்தில் மும்மாரி மழை பொழிய வைத்து மக்கள் பஞ்சத்தை தீர்த்துள்ளார்.
இருளர் ஆட்சி முடிந்த பிறகு பல நூறு ஆண்டுகள் கழித்து இளங்கோசர் என்ற மன்னன் அந்த பகுதியை ஆட்சி செய்துவந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் சேரர் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. அதன் காரணமாக படையெடுப்பில் நமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஊருக்கு மத்தியில் ஒரு கோட்டை எழுப்பியுள்ளார். அந்தக் கோட்டைக்கு நடுவில் ஒரு கோவிலை கட்டி இந்த அம்பாளை அங்கே பிரதிஷ்டை செய்து அம்மனுக்கு கோனியம்மன் என்று பெயரும் வைத்துள்ளார். அதுதான் தற்போது அனைவரும் வழிபடும் கோனியம்மன் கோயிலாக திகழ்ந்து வருகின்றது.
கோனி என்றால் அரசு என்று பொருளாகும். கோயம்புத்தூர் பகுதியில் ஆட்சி செய்யும் அரசு இந்த கோனியம்மன் தான் என கூறப்படுகிறது. இந்த திருக்கோயிலில் பங்குனி மாதங்களில் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
மேலும் படிங்க| சனி பகவான் மூலம் ராஜ யோகத்தை பெற்ற ராசிகள் இவர்கள்தான்
சிறப்புகள்
இந்த கோயிலின் தலை விருட்சமாக வில்வமரம், நாகலிங்க மரம், அரசமரம், வேப்பமரம் ஆகியவை உள்ளன. ஆடி மாதத்தில் இந்த கோயிலில் ஊஞ்சல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எந்த காரியம் செய்தாலும் அதற்கு முன்பு கோனியம்மன் அனுமதி பெற்று இங்கு இருக்கக்கூடிய மக்கள் அந்த காரியத்தை செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க| கேது பகவானின் பண பலன்களை அனுபவிக்கும் ராசிகள் யார் தெரியுமா?
பரிகாரங்கள்
இந்த கோயிலில் வந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என கூறப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தீராத நோய் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அனைத்து நோய்களும் தீரும் எனக் கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
