மோட்சம் தரும் வரதராஜ பெருமாள்.. குளத்திலிருந்து வெளிவரும் அத்தி வரதர்.. காஞ்சிபுரம் கோயில்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மோட்சம் தரும் வரதராஜ பெருமாள்.. குளத்திலிருந்து வெளிவரும் அத்தி வரதர்.. காஞ்சிபுரம் கோயில்கள்!

மோட்சம் தரும் வரதராஜ பெருமாள்.. குளத்திலிருந்து வெளிவரும் அத்தி வரதர்.. காஞ்சிபுரம் கோயில்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 06:00 AM IST

வைணவ பாரம்பரியத்தில் இருக்கக்கூடிய திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாக காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் திகழ்ந்து வருகின்றது.

மோட்சம் தரும் வரதராஜ பெருமாள்.. குளத்திலிருந்து வெளிவரும் அத்தி வரதர்.. காஞ்சிபுரம் கோயில்கள்!
மோட்சம் தரும் வரதராஜ பெருமாள்.. குளத்திலிருந்து வெளிவரும் அத்தி வரதர்.. காஞ்சிபுரம் கோயில்கள்!

இது போன்ற போட்டோக்கள்

வைணவ பாரம்பரியத்தில் இருக்கக்கூடிய திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாக காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் திகழ்ந்து வருகின்றது.

தல வரலாறு

இந்த திருக்கோயில் யாரால் முதலில் நிறுவப்பட்டது என்பது இன்றுவரை தெரியாமல் இருந்து வருகிறது. 153 ஆம் ஆண்டு சோழர்களால் வேழமலையில் குகைவரை கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்க பெற்றுள்ளதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதலாம் குலோத்துங்க சோழன், விக்ரமச்சோழன் இந்த கோயிலில் விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் அம்பிகை சன்னதி மற்றும் அபிஷேக மண்டபம் அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விஜயநகர அரசர்கள் ஊஞ்சல் மண்டபம், கிழக்கு கோபுரம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவியதாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் இருக்கக்கூடிய கல்யாண மண்டபம் வரிசைக்கு 12 தூண்கள் ஆக 96 சிற்பக்கலை மிக்க தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் எட்டுத்தூன் வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நான்கு மூலைகளிலும் தொங்கும் கற் சங்கிலிகள் காணப்படுவது சிற்பக்கலையின் வித்தையாக கருதப்படுகிறது.

கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் கூடிய 180 அடி உயரம் கொண்டதாக காணப்படுகிறது. மூலவராக விளங்கக் கூடிய தேவராஜ பெருமாள் வேழமலை மீது நின்ற கோலத்தில் திருமுக மண்டலங்களுடன் நாற்கரத்தோடு அருள் அளித்து வருகிறார். மூலவரின் நோக்கியபடி தென்மேற்கே பெருந்தேவி தயாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

அத்தி வரதர்

அத்தி வரதர் என அழைக்கப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள் திருக்குளத்தில் பள்ளி கொண்டு காணப்படுகிறார். இந்த பெருமாள் முழுவதுமாக அத்தி மரத்தால் செய்யப்பட்டது என கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி அத்திவரதர் இன் உருவச்சிலை வெளியே எடுக்கப்பட்டு கோயிலில் பள்ளி கொள்ள வைக்கப்படுகிறது.

அத்திவரதர் வெளியே இருக்கும் காலங்களில் உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அத்திவரதர் நமது வாழ்வில் காண்பது மிகப் பெரிய வரப்பிரசாதம் என எண்ணி உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

இந்த கோயிலில் இருந்து திருக்குளத்தின் கிழக்கு திசையில் சக்கரத்தாழ்வார் என அழைக்கப்படும் சுதர்சன ஆழ்வாரின் சன்னதி காணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் காணப்படாத மிகப்பெரிய அளவிலான சுதர்சன ஆழ்வார் திருமேனி இங்கு காணப்படுகின்றது. 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் ஏந்தி பிரம்மாண்டமாக காட்சி கொடுக்கின்றார்.

செல்லும் வழி மற்றும் போக்குவரத்து

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு பேருந்துகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து ஏராளமான பேருந்துகள் மற்றும் தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.