மாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. மீனாட்சி சொக்கநாதர் கல்யாணம்
Chokkanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Chokkanathar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர். சிவபெருமான் என்று திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன் வசம் வைத்துள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
சிவபெருமானுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் நமது இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் ஆண்டு வந்த மன்னர்கள் அந்த காலத்தில் பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
சிவபெருமானின் தீவிர பக்தனாக அனைத்து மன்னர்களும் திகழ்ந்து வந்துள்ளனர். சிவபெருமானை குல தெய்வமாகவே வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக ஒருபுறம் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் தீவிர பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே வானுயர்ந்த கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரம் குறையாமல் வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.