திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. வாக்குவாதம் செய்த பார்வதி தேவி.. காட்சி கொடுத்த சுந்தரேஸ்வரர்.. மயிலாக மாறி நடனம்
Sundareswarar: சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் இருப்பது தான் நாகப்பட்டினம் மாவட்டம் திருமயிலாடி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் பிருகன் நாயகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Sundareswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
தென்னிந்தியாவில் மிகப்பெரிய பிரமாண்ட கோயில்கள் அமைக்கப்பட்டு இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த திருக்கோயில்கள் விளங்கி வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை கலைநயத்தோடு கட்டி வைத்துச் சென்றுள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.