’லக்னம் என்றால் என்ன? ராசியை விட லக்னம் முக்கியம்! ஏன் தெரியுமா?’ ஜோதிடம் அறிவோம்!
ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துக் கொள்கிறோமோ அதே அளவுக்கு லக்னம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

பலருக்கும் தங்களது ராசி மற்றும் நட்சத்திரம் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் லக்னம் பற்றி பலருக்கும் தெரியாது. ஜோதிட விதிகளின் படி ஒருவரது ஜாதக பலன்களை அறிய முதலில் ’லக்னம்’ காரணமாக உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
லக்னம் என்றால் என்ன?
ஜோதிடத்தை பொறுத்தவரை ராசி என்பது உடல் என்றால், லக்னம் என்பது உயிர் ஆகும். பூமி ஒருநாளைக்கு தன்னைத் தானே சுற்றிக் கொண்டு 365 நாட்களில் சூரியனை நீல்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. ஒருவருக்கு பிறந்தநாள், பிறந்தநேரம், பிறந்த நேரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே லக்னம் கணிக்கப்படுகின்றது. ஒரு மனிதனின் ஆத்மா, அதன் பாவம் மற்றும் புண்ணிய காரியங்களை தீர்த்துக் கொள்வதற்காக பிறப்பெடுக்கும் இடமாக லக்னம் உள்ளது. ஒரு நபரின் இயல்பை லக்னத்தை வைத்தே தீர்மானிக்கிறார்கள். முன் ஜென்ம வினைகள், வாழ்கையில் முன்னேற்றம், வாழ்கை துணை, வணிகம், புத்திரபாக்கியம், அபிவிருத்தி, முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்தையும் துல்லியமாக கணிக்க லக்னம் இனியமையாதது ஆகும்.
லக்னத்தை கணிப்பது எப்படி?
உதாரணமாக மார்கழி மாதம் ஒன்றாம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் ஒரு குழந்தை பிறந்த குழந்தைக்கு கும்ப லக்னம் என வைத்துக் கொள்வோம். இதற்கு எப்படி கும்ப லக்னம் என வரையறை செய்யப்பட்டது எனில், மார்கழி மாதம் ஒன்றாம் தேதி தனுசு ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார். ஆனால் சூரியனின் ஒளி ஆனது பூமி தன்னைத்தானே சுற்றுவதால், ராசி மண்டலங்கள் 12-லும் விழக்கூடியது. இதன் அடிப்படையில் காலை 10.30 மணிக்கு பிறந்த குழந்தைக்கு, மதுரையின் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு கும்ப லக்னத்தில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்ததாக கணக்கீடு செய்வர்.