சொந்த வீடு யாருக்கு அமையும்? இந்த 8 விசயம் இருந்தால் மனை பாக்கியம் இருக்காம்..! ஜோதிடர் கூறும் புள்ளிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சொந்த வீடு யாருக்கு அமையும்? இந்த 8 விசயம் இருந்தால் மனை பாக்கியம் இருக்காம்..! ஜோதிடர் கூறும் புள்ளிகள்!

சொந்த வீடு யாருக்கு அமையும்? இந்த 8 விசயம் இருந்தால் மனை பாக்கியம் இருக்காம்..! ஜோதிடர் கூறும் புள்ளிகள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 22, 2025 10:51 AM IST

பொதுவாக ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ஆம் வீடுதான், வீடு, வாகனத்தை குறிக்கும் இடம். 4-ம் இடம், 4-ம் இடத்து அதிபதி, 4-ம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகம், 4-ம் இடத்தை பார்க்கும் கிரகம் மற்றும் செவ்வாய், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் சொந்தமாக வீடு அமையும்.

சொந்த வீடு யாருக்கு அமையுமா? இந்த 8 விசயம் இருந்தால் மனை பாக்கியம் இருக்காம்..! ஜோதிடர் கூறும் புள்ளிகள்!
சொந்த வீடு யாருக்கு அமையுமா? இந்த 8 விசயம் இருந்தால் மனை பாக்கியம் இருக்காம்..! ஜோதிடர் கூறும் புள்ளிகள்!

இது போன்ற போட்டோக்கள்

அனைத்தையும் விட மேலாக இன்றைய காலத்தில் சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சொந்த வீட்டின் பெருமை வாடகை வீட்டில் இருப்பவர்களுக்குதான் தெரியும். ஒவ்வொரு முறையும் வீடு பார்க்கும் போது கிடைக்கும் அனுபவங்கள், அலைச்சல் மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு அலைவது என வாடகை வீட்டில் இருப்பவர்கள் படும் இன்னல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மாட மாளிகையாக இல்லாவிட்டாலும் சொந்தமாக குடிசையாவது இருந்தால் சுதந்திர பறவையாக அவர்கள் உணர்வார்கள்.

சொந்த வீடு அமைப்பு

சிலர் கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் மனதிற்கு பிடித்த வீடு அமையாது. சிலர் ஏராளமான வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு, மாதாமாதம் வாடகை பணத்தை வாங்கி கொண்டு ஜாலியாக செலவு செய்வார்கள். ஒருசிலர் பேங்கில் லோன் போட்டு ஒரேயொரு வீடு வாங்கி ஆயுள் முழுவதும் இஎம்ஐ கட்டி வருவார்கள். சிலர் கடன் பெற்று வீடு வாங்கினாலும் கடனை திருப்ப செலுத்த முடியாமல், ஏலம் விடும் நிலைக்கு தள்ளப்படுவதை பார்க்கிறோம். இதெல்லாம் அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தான் காரணம்.

பொதுவாக ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ஆம் வீடுதான், வீடு, வாகனத்தை குறிக்கும் இடம். 4-ம் இடம், 4-ம் இடத்து அதிபதி, 4-ம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகம், 4-ம் இடத்தை பார்க்கும் கிரகம் மற்றும் செவ்வாய், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் சொந்தமாக வீடு அமையும்.

சொந்த வீடு யாருக்கு :

1. ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ம் வீட்டில் ஆட்சியோ, உச்சமோ பெற்ற கிரகம் இருந்தால் அழகான வீடு அமையும்.

2.லக்னத்திற்கு நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அந்த கிரகத்தின் தசா நடைபெற்றால், கட்டாயம் சொந்த வீடு கட்டி அதில் வசிக்கும் யோகம் கிட்டும்.

3. ஜாதகத்தில் சொகுசு, வீடு, வண்டி, வாகனங்களை குறிக்கும் சுக்கிர பகவான், லக்னத்திற்கு 4ஆம் இடத்தில் இருந்தால் கூடுதல் சிறப்பு. 4-ல் சுக்கிரன் திக் பலம் பெற்றிருப்பார் என்பதால் சொந்தமாக வீடு, வாகனம் அமையும். 4-ல் அமர்ந்து சுக்கிர தசா நடப்பில் வரும்போதும் சொந்தமாக வீடு அமையும். 4-ல் சுக்கிரன், ராகு இணைவு பெற்று, சுக்கிர தசாயோ, ராகு தசாயோ வந்துவிட்டால் சூப்பர். ஷங்கர் படத்தில் வருவதை போல வீடு, வாகனம் என்று எல்லாமே பிரமாண்டமாக இருக்கும்.

4. லக்னத்திற்கு 4-ஆம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் அமையும்.

5. 4-ஆம் வீட்டில் ராகு இருந்தாலும் தீய கிரகசேர்க்கையின்றி அமைந்த ராகுவிற்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி/உச்சம் அடைந்து திசை நடைபெற்றால் சொந்தவீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.

6. லக்னத்திற்கு 5-ஆம் வீட்டின் அதிபதி கேந்திரம் ஏறி பலமுடன் நின்று திசை நடைபெற்றால் தந்தை வழி பூர்வீக வீட்டை வீட்டில் சில திருத்தம் செய்து குடியிருக்கும் யோகம் உண்டாகும்.

7. சொந்த வீட்டிற்கு ஏராளமான விதிகள் ஜோதிடத்தில் இருந்தாலும் அடிப்படையில் செவ்வாய், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்துவிட்டால் சொந்த வீடு தானாக அமையும். செவ்வாய் காலி இடத்தையும் (வீட்டு மனை), சுக்கிரன் வீட்டையும் குறிக்கும். செவ்வாய், சுக்கிரன் இருவரும் ஆட்சி/உச்சம் பெற்று குரு பார்வை பெற்றுவிட்டால், காலி மனை வாங்கி வீடு கட்டி குடியேறுவார்கள்.

8. செவ்வாய், சுக்கிரன் நீசம் அடைந்தோ, 6, 8, 12-ல் மறைந்து விட்டால் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட முடியாது. செவ்வாய் கெட்டு சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கலாம். குறிப்பாக புது வீடு வாங்காமல் பழைய வீட்டை வாங்கினால் தோஷம் நிவர்த்தியாகும்.

கட்டுரையாளர்: ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர், astrovenkataeswar@gmail.com, 91590 13118

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் ஜோதிட நிபுணரின் கருத்துக்கள் மட்டுமே. இவற்றின் உண்மை தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பாகாது. உங்கள் ஜோதிட ஆலோசகரின் பேரில் முன்னெடுப்புகளை எடுக்கலாம்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner