எந்த ராசிக்காரர்கள் எந்த முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும்! அற்புதம் தரும் அறுபடை வீடுகள்!
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டி சில கோயில்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பின்னும் இந்தியாவில் ஜோதிடம் தீவிரமாக நம்பப்படுகிறது. ஏனென்றால் அதனைப் பின்பற்றி நடக்கும் போது மட்டுமே சில நன்மைகள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மனிதனும் அவர் பிறக்கும் நேரம் மற்றும் நாளின் அடிப்படையில் மட்டுமே அவர்களது வாழ்க்கை அமைவதாக ஜோதிடம் கூறுகிறது. இந்நிலையில் கிரகங்களின் இடம் மாற்றத்தால் பல விதமான வாழ்வியல் மாற்றங்களும் ஏற்படுதாக கூறப்படுகிறது. இவ்வாறு கிரகங்களால் பிரச்சனைகள் உண்டாகும் போது, அதனை சரிசெய்ய பரிகாரங்கள் உள்ளன. இதன் வழியாக கிரகத்தின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
May 15, 2025 11:41 AMஏழரை சனியால் எந்த 3 ராசிகளுக்கு சிக்கல்.. பாதிப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
May 15, 2025 09:30 AMசனி தந்தால் யார் தடுப்பார்.. பண லாபம்.. பதவி உயர்வு என பொன்னான காலம் உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 15, 2025 07:30 AMகுரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டி சில கோயில்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக வெவ்வேறு தெய்வங்களின் சன்னதிகளுக்கு செல்லும் போது அவர்களது கிரக நிலைகள் மாறி அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கிறது. பல கிரகங்களின் பார்வையை சரி செய்யும் சக்தி கடவுள்களுக்கு மட்டுமே உள்ளதாக கூறப்பட்டு வருகிறது, அதன் அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் எனராசிக்காரர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அற்புதம் தரும் அறுபடை வீடுகள்
தமிழ் கடவுளான முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளன. இந்த ஆறு திருத்தலங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் இந்த கோவில்களுக்கு செல்லும் போது அனைவரது வீடுகளிலும் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பிறக்கின்றன. தற்போது 12 ராசிக் காரர்களுக்கும் இந்த அறுபடை வீட்டில் எந்த கோவிலுக்கு சென்றால் நன்மை வரும் எனக கூறப்பட்டுள்ளது.
மேஷம் & விருச்சிகம்
ராசியில் மூத்த ராசியான மேஷ ராசிக்காரர்கள் எதிலும் முதன்மையானதாக இருப்பவர்கள் ஆவர். இவர்கள் அவர்களது வாழ்வை தாங்களாகவே மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்களாக இருப்பார்கள். குறிப்பாக எந்த வித கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இத்தகைய மேஷ ராசிக்காரர்கள் அறுபடை வீட்டில் பால தண்டாயுதபாணி ஆக உள்ள பழனி மலைக்கு செல்ல வேண்டும். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற விருச்சிகம் ராசிக்காரர் ஆன இவர்கள் பால தண்டாயுதபாணி ஆக உள்ள பழனி மலைக்கு செல்ல வேண்டும். திரு ஆவினக்குடி எனும் செவ்வாயின் திருத்தலாமாக பழனி உள்ளது. ஞாயிற்று மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பழனி சென்று வர வீட்டில் அனைத்தும் நலம் பெறும்.
ரிஷபம் & துலாம்
சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட ரிஷபம் & துலாம் ராசிக்காரர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். இதுவே வள்ளி முருகனை மணந்த திருத்தலமாகும். செல்வம் லட்சணம் பொருந்திய வள்ளியை வணங்கி வர குடும்பத்தில் செல்வம் பெருகும். இது குடும்பத்தினை வளமாக்கும்.
மிதுனம் & கன்னி
ஆறாம் படை வீடான பழமுதிர்சோலைக்கு புதன் ஆதிக்கம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் செல்ல வேண்டும். வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சியளிக்கும் முருகனை வணங்கி வர வேண்டும். இளமை மற்றும் அழகு கொழிக்க இந்த கோவில் சிறந்த கோவில் ஆகும். அதிர்ஷ்டம் பெருகவும் இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும்.
கடகம் & சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் முருகனின் நான்காவது படை வீடான சுவாமிமலைக்கு செல்ல வேண்டும். ராசி வரிசையில் நான்காவது உள்ள கடகம் தாயின் அன்பை பெற இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். திங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செல்ல வேண்டும். சூரியனின் அருள் உள்ள சிம்ம ராசிக்காரர்களும் திருத்தணி மலைக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
மகரம் & கும்பம்
முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திற்கு இந்த இரண்டு ராசிக்காரர்களும் செல்ல வேண்டும். பணம் மற்றும் திருமணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இவர்கள் இங்கு சென்று வர வேண்டும். தெய்வானையை திருமண செய்து கொண்ட இந்த கோவில் அனைத்து விதமான அருளையும் வழங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செல்ல வேண்டும்.
தனுசு & மீனம்
குருவின் ஆதிக்கம் நிறைந்த இந்த இரு ராசிக்காரர்களும் திருச்செந்தூர் செல்ல வேண்டும். வியாழக் கிழமை அன்று செல்ல வேண்டும். குரு மற்றும் முருகனின் அருளால் தொழில் செழிக்கும். நோய் மற்றும் கடனை நிவர்த்தி செய்யும்.

டாபிக்ஸ்