கஷ்டங்களை போக்க கந்த சஷ்டி வழிபாடு மற்றும் விரதம்! என்ன வழிமுறை!
ஒவ்வொரு மாதமும் இரண்டு சஷ்டிகள் வருகிறது. அந்த இரண்டு சஷ்டியிலும் விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கி நன்மை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் பிரசித்த பெற்ற ஒன்றாகும்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு சஷ்டிகள் வருகிறது. அந்த இரண்டு சஷ்டியிலும் விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கி நன்மை பெருகும் என்பது ஐதீகம். அதுவும் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் பிரசித்த பெற்ற ஒன்றாகும். இது ஐப்பசி மாத அமாவாசை முடிந்த பின்னர், வரக்கூடிய பிரதமை திதியிலிருந்து துவங்கும். இந்த வீரதத்தில் ஏழு நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். முதல் ஆறு நாட்கள் முருகனை மணம் உருக வழிபட்டு, ஏழாவது நாளில் முருகனின் திருக்கல்யாணம் நடைபெறும். 2024 ஆம் ஆண்டிற்கான சஷ்டி விரதம் வரும் நவம்பர் 2 அன்று துவங்க இருக்கிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
கந்த சஷ்டி விரத வரலாறு
சூரபத்மன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகன். இவர் 6 தீப்பொறிகளாக தோன்றினார். மேலும் முருகனை வளர்க்க கார்த்திகை பெண்கள் உருவாக்கப்பட்டனர். ஆறு உருவங்களையும் ஒன்றாக்கி ஆறுமுகம் என பெயர் சூட்டப்பட்டார். பிறகு திருச்செந்தூரில் சூரபத்மனை அளிக்க செல்வதற்கு முன் பஞ்சலிங்கத்தை வழிபட்டு சென்றார். தோல்வியை ஏற்காத சூர பத்மன் மரமாக மாறினான்.
பிறகு முருக பெருமான் தனது வேலால் அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து ஒருபுறம் சேவலாகவும் மற்றொரு புறம் மயிலாகவும் மாற்றி அவரின் கருணையால் தனது வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். இதனால் தேவர்கள் துயரம் நீங்கியது இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்திரன் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பி இவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இந்த போர் நடந்த காலகட்டத்தை நினைவு கூறும் வகையில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் முருகப் பெருமானின் கோவில்களில் சூரசம்காரமும் நடைபெறுகிறது.