குரு பிரதோஷ விரதம்: ஏப்ரல் மாதத்தின் முதல் பிரதோஷம்.. விரதம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
குரு பிரதோஷ விரதம்: பிரதோஷ காலத்தில் சிவனை மனதார நினைத்து பூஜித்தால் ஒருவரின் பிறவிக் கடன்கள், கஷ்டங்கள் நீங்கி, செல்வ வளம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.

இந்து மதத்தில் பிரதோஷ விரதம் மிகுந்த புண்ணிமாக பார்க்கப்படுகிறது. இந்த விரதம் மாதத்திற்கு இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது. ஒரு முறை சுக்ல பக்ஷத்தின் திரயோதசி திதியில் மற்றொன்று கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுசரிப்பதன் மூலம், சிவபெருமானும், பார்வதிதேவியும் பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் தீர்த்து, ஆனந்தம் மற்றும் அமைதியைக் கொடுப்பார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
இந்த மாதத்தின் முதல் பிரதோஷ விரதம் நாளை ( ஏப்ரல் 10 ) அனுசரிக்கப்படுகிறது. பிரதோஷ காலத்தில் (மாலை 4:30 முதல் 6:00 மணி வரை) சிவனை பூஜித்தால், அவரது அருளால் வாழ்வில் செழிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
எப்படி விரதம் இருக்க வேண்டும்
விரத நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, விரதம் எடுக்க தயாராக வேண்டும். பிரதோஷ நேரம் மாலை என்பதால் அப்போது தான் பூஜை செய்ய வேண்டும். சிவபெருமான் மற்றும் பார்வதிக்கு பால், தயிர், நெய், தேன் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். வெள்ளை பூக்கள், பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை பிரசாதமாக வைக்க வேண்டும். பின்பு பிரதோஷ விரத கதை படித்து முடிதுவீட்டு, கடவுளுக்கு ஆரத்தி காண்பிக்க வேண்டும். இந்த முறையில் விரதத்தை செய்தால் கடன்கள் விலகி, மன நிம்மதி ஏற்பட்டு, குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நம்பப்படுகிறது.
குரு பிரதோஷ விரத பூஜை நேரம்
தொடக்கம்: 9 ஏப்ரல் 2025 – இரவு 10:54 மணி
முடிவு: 11 ஏப்ரல் – இரவு 1:00 மணி வரை
பிரதோஷ விரத விதிகள்
பிரதோஷ விரத நாளில் மாமிச உணவு சாப்பிட கூடாது. இந்த நாளில், முடிந்தவரை சிவபெருமானை தியானிக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்கள் அல்லது எண்ணங்களை மனதில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இந்த நாளில் கோபப்படக்கூடாது.
பிரதோஷ விரத நன்மைகள்
புராணங்களின் படி, பிரதோஷ விரதம் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. குறிப்பாக நோயால் அவதிப்பட்டு கொண்டு இருந்தால் அவர்கள் ஆரோக்கியம் பெற இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
குரு பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒருவர் 100 பசுக்களை தானம் செய்த பலனைப் பெறுகிறார். மேலும் எதிரி தொல்லையும் அடியோடு மறையும் என்றும் கூறப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சனியின் குறைபாடுகளும் முடிவுக்கு வருகின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்