Akshaya Tritiya: அட்சய திருதியன்று லட்சுமி கடாட்சம் பெற வேண்டுமா? இந்த பொருட்களை வாங்க மறக்காதீங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Akshaya Tritiya: அட்சய திருதியன்று லட்சுமி கடாட்சம் பெற வேண்டுமா? இந்த பொருட்களை வாங்க மறக்காதீங்க!

Akshaya Tritiya: அட்சய திருதியன்று லட்சுமி கடாட்சம் பெற வேண்டுமா? இந்த பொருட்களை வாங்க மறக்காதீங்க!

Aarthi Balaji HT Tamil
Published Apr 11, 2025 01:44 PM IST

Akshaya Tritiya: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் அவற்றிற்கு பதிலாக என்னென்ன பொருட்களை வாங்கி வழிபாடு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

அட்சய திருதியன்று லட்சுமி கடாட்சம் பெற வேண்டுமா? இந்த பொருட்களை வாங்க மறக்காதீங்க!
அட்சய திருதியன்று லட்சுமி கடாட்சம் பெற வேண்டுமா? இந்த பொருட்களை வாங்க மறக்காதீங்க!

இது போன்ற போட்டோக்கள்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் அவற்றிற்கு பதிலாக என்னென்ன பொருட்களை வாங்கி வழிபாடு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

செம்பு அல்லது பித்தளை பாத்திரம்

அட்சய திருதியை அன்று செம்பு அல்லது பித்தளை பாத்திரம் வாங்குவது நல்லது. இந்த நாளில் நீங்கள் ஏதேனும் செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களை வாங்கினால், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதை சமையலறையில் வைத்தால், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

வெள்ளி நாணயம்

அட்சய திருதியை அன்று, ஒரு வெள்ளி நாணயம் வாங்குவதும் நல்லது. லட்சுமி தேவி உருவம் பொறித்த வெள்ளி நாணயம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கும்.

பருப்பு மற்றும் தானியங்கள்

வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்களை அட்சய திருதி நாளில் வாங்குவது நன்மை தரும். இது வீட்டில் உணவுப் பஞ்சத்தைத் தவிர்த்து, நிலையான செழிப்பை உருவாக்கும்.

சிலைகள்

பூஜைக்காக புதிய தெய்வ சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாம். லட்சுமி, குபேரன் சிலைகளை கொண்டு வருவது செல்வம் பெருக வழிவகுக்கும்.

நவதானியங்கள்

அட்சய திருதியை நாளில் நவதானியங்களை வாங்குவது, வீட்டில் உணவு பற்றாக்குறையை நீக்கி, ஒவ்வொரு தானியமும் ஒரு கிரக சக்தியை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குடும்ப நலனுக்கும் ஆன்மிக சக்திக்கும் உதவுகிறது.

மனநிறைவுடன் மேற்கூறிய பொருட்களை வாங்கினால் அதற்கான அதன் பலனை முழுவதுமாக அனுபவிக்க  முடியும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

அட்சய திருதியை அன்று மாலை வடக்கு திசையில் விளக்குகளை ஏற்ற வேண்டும், ஏனெனில் இந்த திசை குபேர பகவான் மற்றும் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் திசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் வடக்கு திசையில் விளக்கை ஏற்றுவதன் மூலம், அந்த நபர் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Aarthi Balaji

TwittereMail
ஆர்த்தி பாலாஜி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 7+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு, ஆன்மிகம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள இவர், டாப் தமிழ் நியூஸ், சமயம் தமிழ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்