Study Room Vastu Tips: எச்சரிக்கை.. உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்காததற்கு வாஸ்து கூட காரணமாம்.. இத தெரிஞ்சுக்கோங்க!
வீட்டில் வாஸ்து இல்லாததால் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. பிள்ளைகள் சொல்வதைக் கேட்பதில்லை என்றும், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தையின் வாசிப்பு அறையின் திசையை சரிபார்க்கவும்.
நம் குழந்தைகள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடுவார்கள். ஆனால் புத்தகத்தைப் எடுத்து படிக்க சொன்னால் மட்டும் அவர்களுக்கு அலுப்பும் ஏற்படும். படிப்பில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. பல பெற்றோர்களுக்கு இது பெரிய தலைவலி. குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில் குழந்தைகளுக்கான பல பரிகாரங்கள் உள்ளன. வீட்டில் வாஸ்து இல்லாததால் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. பிள்ளைகள் சொல்வதைக் கேட்பதில்லை என்றும், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தையின் வாசிப்பு அறையின் திசையை சரிபார்க்கவும். குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த வாஸ்து சாஸ்திரத்தில் சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் உங்கள் பிள்ளைகள் படிப்பில் முதலிடம் பெறுவார்கள்.
அறை எந்த திசையில் இருக்க வேண்டும்?
வாஸ்து படி குழந்தைகள் இருக்கும் அறை தென்மேற்கு திசையில் இருந்தால் உங்கள் பேச்சை கேட்கவே மாட்டார்கள். எனவேதான் அவர்களுக்கு வீட்டின் வடகிழக்கு திசையில் அறை ஒதுக்க வேண்டும். மேலும் அறையின் கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் பட வரைபடத்தை வைக்கவும். படிக்கும் அறையில் வடகிழக்கு மூலையில் அதிக எடை கொடுக்கக்கூடாது. முடிந்தால் வடகிழக்கு மூலையை காலியாக விடுவது நல்லது.
அறை சுத்தமாக இருக்க வேண்டும்
சூரிய ஒளி அறைக்குள் நுழைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரஸ்வதி தேவியின் படத்தை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் அறையில் வைக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் போது ஒரு கிளாஸ் தண்ணீரையும் மேஜையில் வைக்கவும். படிக்கும் அறையில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது. அறை எவ்வளவு காலியாகவும் சுத்தமாகவும் இருக்கிறதோ, அவ்வளவு நன்றாகப் படிக்க வேண்டும்.
அறையின் நிறம் முக்கியமானது
குழந்தைகள் படிக்கும் அறை மட்டுமல்ல, வாஸ்து படி அவர்களின் அறையின் நிறமும் முக்கியம். குழந்தைகள் படிக்கும் அறைக்கு எப்போது வெளிர் வண்ணங்கள் பூச வேண்டும். வெளிர் மஞ்சள், இளஞ்சிவப்பு, வெளிர் பச்சை நிறங்கள் நல்லது. அவற்றைச் செய்வதன் மூலம் படிப்பு மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்த உதவுகிறது.
ஒரு பூகோளம் அவசியம்
வாஸ்து படி குழந்தைகள் படிக்கும் அறையில் பூகோளம் கண்டிப்பாக வைக்க வேண்டும். பூகோளத்தை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. பூகோளத்தை வடகிழக்கு திசையில் வைப்பதால் குழந்தை படிப்பில் கவனம் செலுத்துகிறது. தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்க இதை செய்யுங்கள்
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க தென்மேற்கு திசையில் இரண்டு படிக வட்டங்களை வைக்கவும். அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு வாரம் உப்பு நீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு, அவற்றைக் கழுவி ஒரு கண்ணாடி தட்டில் வைக்கவும். மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து உலர்த்திய பின் மீண்டும் வீட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
மேலும் தென்மேற்கு திசையில் குடும்ப உறுப்பினர்கள் சிரித்தபடி போட்டோ பிரேம் வைப்பது நல்லது. மேலும், மகாபாரதம், போர்க் காட்சிகளை வீட்டில் வைக்கக் கூடாது. கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்றவற்றை திறந்த இடங்களில் வைக்கக் கூடாது. மேலும் அவற்றை சமையலறையில் தொங்கவிடக் கூடாது.