Vastu tips: அப்பறம் சனி ஆட ஆரம்பிச்சுடுவார்.. தவறியும் இந்த பொருட்களை கடனாக கொடுக்கவோ வேண்டாம்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: அப்பறம் சனி ஆட ஆரம்பிச்சுடுவார்.. தவறியும் இந்த பொருட்களை கடனாக கொடுக்கவோ வேண்டாம்..!

Vastu tips: அப்பறம் சனி ஆட ஆரம்பிச்சுடுவார்.. தவறியும் இந்த பொருட்களை கடனாக கொடுக்கவோ வேண்டாம்..!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 06, 2024 11:42 AM IST

சிலர் எதைக் கொடுத்தாலும் இலவசமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த விஷயங்களை தவறுதலாக கூட இலவசமாக கடன்கொடுக்கவும் கூடாது. வாங்கக்கூடாது. அப்படிச் செய்வதால் குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்களுடன் அமைதியின்மையும் ஏற்படும். அப்படியானால் அந்த விஷயங்கள் என்ன?

தவறியும் இந்த பொருட்களை கடனாக கொடுக்கவோ வாங்கவோ செஞ்சுடாதீங்க.. அப்பறம் ரெம்ப கஷ்டம்!
தவறியும் இந்த பொருட்களை கடனாக கொடுக்கவோ வாங்கவோ செஞ்சுடாதீங்க.. அப்பறம் ரெம்ப கஷ்டம்!

ஆனால் சிலர் எதைக் கொடுத்தாலும் இலவசமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த விஷயங்களை தவறுதலாக கூட இலவசமாக கடன்கொடுக்கவும் கூடாது. வாங்கக்கூடாது. அப்படிச் செய்வதால் குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்களுடன் அமைதியின்மையும் ஏற்படும். அப்படியானால் அந்த விஷயங்கள் என்ன?

உப்பு

சனி பகவான் உப்புடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இதனால் நாம் அண்டை வீட்டினர் யாருக்கும் உப்பு கடன் கொடுக்கக் கூடாது. யார் தாராளமாக கொடுத்தாலும் வாங்கக்கூடாது. வீடுகளுக்குப் பக்கத்தில் வசிக்கும் பலர் உப்பு போடவோ, கடன் வாங்கவோ வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உப்பு தானம் செய்தால், சனியின் தாக்கம் நம் குடும்பத்திற்கும் நமக்கும் அதிகமாக வரும். அதன் காரணமாக தொடர்ந்து நிதி பிரச்சனைகள் அதிகரிக்கும்.

கர்சிஃப்

தவறுதலாக கூட பிறருக்கு சொந்தமான கைக்குட்டையை நாம் எடுக்க கூடாது. அப்படி எடுத்தாலும் உடனே திருப்பி கொடுக்க வேண்டும். இலவசமாக கர்சிஃப் எடுத்துக்கொள்வது இருவருக்கும் இடையிலான உறவைக் கெடுக்கும் என்று நம்பப்படுகிறது. நண்பர்களின் உறவு மோசமடையும். குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்ந்து சண்டை சச்சரவுகள் ஏற்படும். இது உடல் நலத்திற்கும் நல்லதல்ல. அடுத்தவர்களின் வியர்வை தோய்ந்த கைக்குட்டைகளை நீங்கள் பயன்படுத்தினால் அந்த கிருமிகள் பரவி நமக்கு நோயை உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது.

இரும்பு

பொதுவாக இரும்பு சனியுடன் நேரடியாக தொடர்புடையது. அதனால் பழைய இரும்பு பொருட்களையும், உபயோகமற்ற பொருட்களையும் வீட்டில் சேர்த்து வைக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. அவை எதிர்மறை ஆற்றலின் இருப்பிடமாக மாறும். இரும்பை இலவசமாக எடுத்தாலும் அல்லது வேறு யாரிடமாவது கடன் வாங்கினாலும் பிரச்சனைகள் வரும். அதுமட்டுமின்றி, சனிக்கிழமையில் இரும்புப் பொருட்களை வாங்குவதும் நல்லதல்ல.

ஊசி

அக்கம்பக்கத்தில் இருந்து அடிக்கடி நாம் வாங்குவது அல்லது கொடுக்கும் ஒரு பொருள் ஊசி. நம்மிடம் இல்லை என்றால் உடனே வேறு ஒருவரிடம் சென்று ஊசியை அவரசத்திற்கு வாங்கி வருகிறோம். ஆனால் அதை செய்ய கூடாது. இப்படி ஒரு ஊசியை எடுத்துக்கொள்வது வாழ்க்கையில் சிரமங்களுக்கு வழிவகுக்கும். அடிக்கடி சண்டையை உண்டாக்கும். அதனால்தான் ஊசி தேவையென்றால் கடையில் சென்று வாங்க வேண்டும். ஆனால் வேறொருவரிடம் இருந்து இலவசமாக எடுக்க வேண்டாம். அதுமட்டுமின்றி, மாலையில் விளக்கு வைத்த பிறகு துணி தைக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.

எண்ணெய்

மற்றவர்களிடமிருந்து எண்ணெய் எடுப்பது சனியை நேரடியாக பாதிக்கும். ஏனெனில் எண்ணெய் சனியுடன் தொடர்புடையது. மேலும் அடுத்தவர்களிடம் எண்ணெய் வாங்குவது குடும்பத்தில் நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

சங்கு

அதேபோல் தான் நாம் வைத்திருக்கும் சங்கை யாருக்கும் பரிசாக கொடுக்கக்கூடாது. ஏனெனில் சங்கு லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு இருவருக்கும் மிகவும் பிடித்தமானது. லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள சங்கு தவறுதலாக யாருக்கும் கொடுக்க வேண்டாம். பரிசாகக் கூட கொடுக்க வேண்டாம். இதனால் நிதி இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. சங்கு கொடுப்பது உங்கள் வீட்டின் லட்சுமியை மற்றவருக்கு கொடுப்பது போன்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner