1000 ஆண்டுகள் தவம் செய்த பலனை தரும் வருத்தினி ஏகாதசி விரதம் பற்றி தெரியுமா?.. அபூர்வ புண்ணிய தினத்தின் மகிமைகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  1000 ஆண்டுகள் தவம் செய்த பலனை தரும் வருத்தினி ஏகாதசி விரதம் பற்றி தெரியுமா?.. அபூர்வ புண்ணிய தினத்தின் மகிமைகள் இதோ!

1000 ஆண்டுகள் தவம் செய்த பலனை தரும் வருத்தினி ஏகாதசி விரதம் பற்றி தெரியுமா?.. அபூர்வ புண்ணிய தினத்தின் மகிமைகள் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 23, 2025 11:38 AM IST

வருத்தினி ஏகாதசி விரதம்: வருத்தினி என்றால் பாதுகாப்பது என்று பொருள். இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் பாவ மன்னிப்பு மற்றும் ஆன்மீக அமைதியை அடைவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

1000 ஆண்டுகள் தவம் செய்த பலனை தரும் வருத்தினி ஏகாதசி விரதம் பற்றி தெரியுமா?.. அபூர்வ புண்ணிய தினத்தின் மகிமைகள் இதோ!
1000 ஆண்டுகள் தவம் செய்த பலனை தரும் வருத்தினி ஏகாதசி விரதம் பற்றி தெரியுமா?.. அபூர்வ புண்ணிய தினத்தின் மகிமைகள் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் வரக் கூடிய ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி விரதம் என்று பெயர். வருத்தினி என்றால் பாதுகாப்பது என்று பொருள். இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் பாவ மன்னிப்பு மற்றும் ஆன்மீக அமைதியை அடைவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும், இந்தாளில் விரதம் இருந்தால் 1000 ஆண்டுகள் தவம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வருத்தினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களின் பாவங்கள் தீர்வதோடு சகல செல்வ வளங்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மன அல்லது உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விரதம் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் வருத்தினி ஏகாதசி எப்போது அனுசரிக்கப்படும் என்பதையும், விரதத்தின் போது செய்ய வேண்டியவை குறித்தும் இனி பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு வருத்தினி ஏகாதசி எப்போது?

ஏகாதசி திதி புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025 அன்று மாலை 4:43 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025 அன்று பிற்பகல் 2:32 மணிக்கு முடிவடைகிறது. எனவே, வருத்தினி ஏகாதசி விரதம் வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025 அன்று அனுசரிக்கப்படும். பிரதோஷ காலம்: ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை, காலை 05 மணி 46 நிமிடம் முதல் 08 மணி 23 நிமிடம் வரை.

வருத்தினி ஏகாதசி விரத முறை

ஏகாதசிக்கு ஒரு நாள் முன், சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு உண்ணவும், இரவில் பிரம்மச்சரியத்தைப் கடைபிடிக்கவும் வேண்டும். ஏகாதசி நாளில், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து உபவாசம் இருப்பதாக சங்கல்பம் செய்யவும். பின்னர் ஸ்ரீமன் நாராயணனை வழிபட்டு, அவருக்கு பழங்கள், பூக்கள், சாம்பிராணி, விளக்குகள் போன்றவற்றை நிவேதனம் செய்யவும். முழு நாளும் விரதம் இருக்கவும் அல்லது பழங்களை மட்டும் சாப்பிடவும். இரவு முழுவதும் விழித்து ஸ்ரீமன் நாராயணனின் ஸ்தோத்திரங்களை படித்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்