இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?

Marimuthu M HT Tamil Published Apr 12, 2025 05:18 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 12, 2025 05:18 AM IST

இன்றைய ராசிபலன்: ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?
இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று ஏப்ரல் 12 உங்களுக்கு எப்படி இருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிக்கான பலன்கள்:

மேஷ ராசி:

மேஷ ராசியினருக்கு உடலில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். கால்நடை வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்னைகள் சரியாகும்.

ரிஷபம் ராசி:

ரிஷப ராசியினருக்கு, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முதலீடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சிந்தனைகளின் போக்கில் குழப்பமும், தெளிவின்மையும் காணப்படும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

மிதுன ராசி:

மிதுன ராசியினருக்கு, குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனை விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்களின் வழியில் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

கடக ராசி:

கடக ராசியினருக்கு, உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். பத்திர வழியில் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் வார்த்தைகள் மீதான மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசியினருக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத் தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு, குறுந்தொழிலில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகப் பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசி:

கன்னி ராசியினருக்கு, பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்