Friday Temple: கனவில் தோன்றிய சிவபெருமான்.. வழிகாட்டியே எறும்பு கூட்டம்.. சுயம்புவாக எழுந்த காசி விஸ்வநாதர்
Kasi Viswanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வநாதன் எனவும் தாயார் உலகமமன் எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Kasi Viswanathar: உலகம் முழுவதும் சிவபெருமான் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உயிரினங்களால் வணங்கப்பட்ட கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.
குறிப்பாக தமிழ்நாட்டின் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி கொண்டுள்ளனர். மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமான் ஆகச் சிறந்த கடவுளாக திகழ்ந்த வருகின்றார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் ஒருபுறம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே அவர்களின் குலதெய்வமாக விளங்கிய சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத வரலாற்று சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் திகழ்ந்து வருகின்றன.