அதிர்ஷ்ட காத்து வீசும் அர்த்தகேந்திர யோகம்.. சனி புதன் சேர்க்கை.. பண மழை ராசிகள்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்ட காத்து வீசும் அர்த்தகேந்திர யோகம்.. சனி புதன் சேர்க்கை.. பண மழை ராசிகள்..!

அதிர்ஷ்ட காத்து வீசும் அர்த்தகேந்திர யோகம்.. சனி புதன் சேர்க்கை.. பண மழை ராசிகள்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 11:02 AM IST

மே 18ஆம் தேதி அன்று சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் 45 டிகிரியில் அமர்ந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்க உள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையில் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போகின்றனர்.

அதிர்ஷ்ட காத்து வீசும் அர்த்தகேந்திர யோகம்.. சனி புதன் சேர்க்கை.. பண மழை ராசிகள்..!
அதிர்ஷ்ட காத்து வீசும் அர்த்தகேந்திர யோகம்.. சனி புதன் சேர்க்கை.. பண மழை ராசிகள்..!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது இவர் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

வருகின்ற மே 18ஆம் தேதி அன்று சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் 45 டிகிரியில் அமர்ந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்க உள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையில் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. நிலைமையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை மற்றும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன ராசி

சனி மற்றும் புதன் சேர்ந்து உருவாக்க உள்ள அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடக ராசி

சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு நிறைய லாபத்தை பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல நல்ல செய்திகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்ட கதவு உங்களுக்கு திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது.

பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்படி எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும் என கூறப்படுகிறது. திருமண யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner