சனிபகவான் நல்லவரா? கெட்டவரா?.. சனி தடுத்தால் எவர் கொடுப்பார்.. யார் இந்த சனி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனிபகவான் நல்லவரா? கெட்டவரா?.. சனி தடுத்தால் எவர் கொடுப்பார்.. யார் இந்த சனி தெரியுமா?

சனிபகவான் நல்லவரா? கெட்டவரா?.. சனி தடுத்தால் எவர் கொடுப்பார்.. யார் இந்த சனி தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 30, 2025 12:45 PM IST

சனி பகவானின் தசா நடப்பவர்களின் நிலைமையோ இதைவிட மோசம். இப்படியெல்லாம் விரக்தியில் புலம்பும் அளவிற்கு சனிபகவான் அவ்வளவு மோசமானவரோ, கொடூரமானவரோ அல்ல. இதற்கெல்லாம் சனி பகவான் பற்றி சிலர் ஏற்படுத்தி வைத்துள்ள மாயபிம்பம்தான் காரணம்.

சனிபகவான் நல்லவரா? கெட்டவரா?.. சனி தடுத்தால் எவர் கொடுப்பார்.. யார் இந்த சனி தெரியுமா?
சனிபகவான் நல்லவரா? கெட்டவரா?.. சனி தடுத்தால் எவர் கொடுப்பார்.. யார் இந்த சனி தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவானின் தசா நடப்பவர்களின் நிலைமையோ இதைவிட மோசம். இப்படியெல்லாம் விரக்தியில் புலம்பும் அளவிற்கு சனிபகவான் அவ்வளவு மோசமானவரோ, கொடூரமானவரோ அல்ல. இதற்கெல்லாம் சனி பகவான் பற்றி சிலர் ஏற்படுத்தி வைத்துள்ள மாயபிம்பம்தான் காரணம்.

சனி கெட்டவரா?

"சனி பகவானிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை. மனித வாழ்க்கைக்கு தேவையில்லாத விஷயங்களை தான் தருவார். அவரிடம் நல்லதே கிடையாது" போன்ற பேச்சுகள் அதிகம். ஒரு பொய்யை திரும்ப திரும்ப ஆயிரம் தடவை சொன்னால் உண்மையாக இருக்குமோ என்று நம்புவது மனித இயல்புதானே.

கஷ்டம், நஷ்டம், வறுமை, பிரச்னைகளைதான் சனிபகவான் கொடுப்பார் என்று கேட்டு கேட்டு நமக்கும் அது பழகிவிட்டது. இதெல்லாம் விட உச்சகட்ட கொடுமை, சனிபகவானுக்குரிய 8-ம் எண்ணைக்கூட அதிர்ஷ்டம் இல்லாத நம்பர் என்று ஒதுக்கிவைத்துவிட்டார்கள். RTO ஆபிஸ்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

நீதிமான் சனிபகவான்

உண்மையை சொன்னால், சனிபகவானிடம் கொடுப்பதற்கு ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. ஆயுளுக்கு காரக கிரகமே சனிபகவான்தான். "உத்தியோகம் புருஷ லட்சணம்" என்று சொல்வார்கள். அந்த உத்தியோகத்திற்கு காரகனும் அவர்தான். மனிதனுக்கு வேலை, தொழிலை கொடுத்து உயர்த்தி விடுவார். தொழிலாளியும் அவரே, தொழிலதிபரும் அவரே. சனிபகவானிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றால் மேலே சொன்ன விஷயங்களை வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா?

பிரச்னை என்றாலே அதற்கு சனிபகவான்தான் காரணம் என்று பழியை அவர் மீது போடுவதற்கு பலர் இருந்தனர். இன்னும் கொஞ்ச நாளில், அடிபம்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும் சனி பகவான்தான் காரணம் என்று சொல்வார்கள் போலும்.

சனிபகவானை கண்டு ஏன் இந்த பீதி? :

சனிபகவான் பாடாய்படுத்துவார், கஷ்டங்களை கொடுப்பார், துன்பப்படுத்துவார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதெல்லாம் யாருக்கு என்பதுதான் முக்கியம். எப்போதும் கெட்டதையே சிந்திப்பவர்கள், அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்குதான் நடக்கும். சிம்பிளாக சொன்னால், போலீசை பார்த்தால் திருடன் தானே பயப்படவேண்டும்? நல்லவர்கள் ஏன் பயப்படவேண்டும்?.

ஜோதிடத்தில் சனிபகவானை கர்ம காரகன் என்று சொல்வார்கள். அதாவது ஒருவரது கர்ம வினைக்கு ஏற்ப தவறாமல் பலனை தருபவர். ஒருவர் செய்த நல்லதற்கும், தீய செயல்களுக்கு ஏற்றவாறு அதிர்ஷ்டத்தையும், தண்டனைகளையும் தருவார். பணக்காரன், ஏழை, வேண்டியவர், வேண்டாதவர், அதிகாரத்தில் உள்ளவர், அடிமட்டத்தில் உள்ளவர் என்ற பாகுபாடே அவருக்கு கிடையாது.

நீதி தேவதையின் கையில் உள்ள தராசை போல் பாவத்தையும், புண்ணியத்தையும் எடைபோட்டு அதற்கு தகுந்த சன்மானத்தை வட்டியுடன் சேர்த்து கொடுத்துவிடுவார். அவரது பாவ புண்ணிய கணக்கில் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. இதனால்தான் தராசு-வை சின்னமாக கொண்ட துலாம் ராசியில் சனி பகவான் உச்சமாகிறார்.

"சனி தடுத்தால் எவர் கொடுப்பார், சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" என்று பழமொழியே உண்டு. நவக்கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு, கேது ஆகியோர் கோடிக்கோடியாக கொட்டி கொடுத்தாலும் அதை கண் இமைக்கும் நேரத்தில் சுருட்டிக்கொண்டு தெருக்கோடியில் நிற்க வைப்பதில் கெட்டிக்காரர். நவக்கிரகங்கள் கொடுக்கும் நல்லதை தடுத்து தடங்கல் ஏற்படுத்தும் அதிகாரமும் சனிபகவானுக்கு உண்டு. அதேபோல், சனிபகவான் ஒருவருக்கு கொடுத்துவிட்டால் அதை திரும்பி எடுக்கும் அதிகாரம் நவக்கிரகங்களில் யாருக்கும் கிடையாது.

கட்டுரையாளர்

ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர்

astrovenkataeswar@gmail.com

91590 13118

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner