தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!

தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 07, 2025 06:00 AM IST

சிறப்பு மிகுந்த திருக்கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில். விஷ்ணு காஞ்சிபுரம் என அழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவபெருமான் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!
தொட்டால் புண்ணியங்களை கொட்டும் புண்ணியகோடீஸ்வரர்.. திருமால் வழிபட்ட தலம்.. வரம் தரும் சிவபெருமான்!

இது போன்ற போட்டோக்கள்

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து பிரம்மாண்டமாக காணப்படுகின்றன.

நவகிரகங்களின் தலைநகரமாக கும்பகோணம் விளங்கி வந்தாலும் அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாத கோயில் நகரமாக காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. பழமை வாய்ந்த தலைசிறந்த சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது காஞ்சிபுரத்தில் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த திருக்கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில். விஷ்ணு காஞ்சிபுரம் என அழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவபெருமான் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

தல சிறப்பு

இந்த கோயிலில் மும்மூர்த்திகளில் ஒருவராக இருக்கக்கூடிய விஷ்ணு பகவான் வழிபாடு செய்தார் என கூறப்படுகிறது. அதேபோல புராணங்களில் கூறக்கூடிய கஜேந்திரன் என்ற யானையும் இந்த கோயிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்த குளத்தில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என கூறப்படுகிறது. புண்ணியங்கள் பல மடங்கு பெருகும் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கோயில் புண்ணியகோடீசம் என அழைக்கப்படுகிறது.

பெரும்பாலாக அனைத்து கோயில்களிலும் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை விட இந்த கோயிலில் இருக்கக்கூடிய லிங்கம் சற்று மாறுபட்டதாக காணப்படுகிறது. அதே போல இறைவனுக்கு இடது புறம் இருக்கக்கூடிய சதுர வடிவிலான லிங்கத்தை தொட்டு தரிசனம் செய்தால் புண்ணியங்கள் பல மடங்கு பெருகும் என கூறப்படுகிறது.

இந்த கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் திகழ்ந்து வருகின்றது. கோயில் குளத்தை நோக்கி கிழக்கு கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய அம்பிகை புவனேஸ்வர் என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டு வருகின்றார். ஊர்தவ தாண்டவ மூர்த்தி, நரசிம்மரின் சிற்பங்கள் என அனைத்தும் இந்த கோயிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. சிவபெருமானின் பல்வேறு நடன தோரணைகள் பல தூண்களில் இங்கு காணப்படுகின்றன.

தல வரலாறு

இந்த திருக்கோயில் 13ம் நூற்றாண்டில் சோழ மன்னனான மூன்றாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திருக்கோயில் விஷ்ணு பகவானால் வழிபட்டதாக கூறப்படுகிறது. ஒருமுறை விஷ்ணு பகவானுக்கு பணி செய்யும் கஜேந்திரன் என்ற யானை முதலில் பிடியில் சிக்கி உள்ளது.

அப்போது விஷ்ணு பகவான் மேக வடிவில் இங்கு இருக்கக்கூடிய இறைவனை வழிபட்டதால் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடியிலிருந்து சிவபெருமான் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கஜேந்திரன் யானையோடு விஷ்ணு பகவான் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

விஷ்ணு பகவானின் முன்பு தோன்றிய சிவபெருமான் அவருக்கு பல வரங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. வரங்களைப் பெற்ற விஷ்ணு பகவான் வரதராஜ பெருமாள் என்ற திருநாமத்தை அங்கு பெற்றதாக கூறப்படுகிறது. ஜானுடன் வந்த காரணத்தினால் அத்தகிரி என்ற பெயரையும் அவர் பெற்றார் என கூறப்படுகிறது.