Jenma Sani luck: கால்வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. குத்திக்குதறும் ஜென்ம சனி.. தப்பிக்க செல்ல வேண்டிய கோயில்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jenma Sani Luck: கால்வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. குத்திக்குதறும் ஜென்ம சனி.. தப்பிக்க செல்ல வேண்டிய கோயில்கள்!

Jenma Sani luck: கால்வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. குத்திக்குதறும் ஜென்ம சனி.. தப்பிக்க செல்ல வேண்டிய கோயில்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 17, 2024 09:30 PM IST

Jenma Sani luck: ஜென்ம சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் கும்பராசிக்காரர்கள் அதிலிருந்து தப்பிக்க செல்ல வேண்டிய கோயில்கள் என்னென்ன?

Jenma Sani luck: கால்வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. குத்திக்குதறும் ஜென்ம சனி.. தப்பிக்க செல்ல வேண்டிய கோயில்கள்!
Jenma Sani luck: கால்வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. குத்திக்குதறும் ஜென்ம சனி.. தப்பிக்க செல்ல வேண்டிய கோயில்கள்!

இது போன்ற போட்டோக்கள்

படாதபாடு படுத்தும் ஜென்ம சனி 

ஜென்ம சனியால் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் கும்பராசிக்காரர்களே, எவ்வளவு பரிகாரம் செய்தும், எதுவுமே கை கொடுக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறீர்களா? எவ்வளவோ கோயில்களுக்கு சென்ற பின்னரும், முடியாதோருக்கு அன்னதானம் உதவிகள் வழங்கிய பின்னரும்,  பாதிப்பு இன்னும் அடங்கவில்லையா? இவையெல்லாம் ஜென்ம சனியின் பாதிப்புகள்தான். 

நீங்கள் மேல் கூறியவற்றையெல்லாம் செய்த காரணத்தினால்தான், தற்போது தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள், இல்லையென்றால், நீங்கள் இன்னும் வேதனையில் சிக்கித்தவிக்க வேண்டிய சூழ்நிலை வாய்த்து விடும். கும்பம் இயல்பிலேயே மிகவும் நல்ல ராசி. அனைவரிடத்திலும் மரியாதையை எதிர்பார்க்கும். ஊருக்கெல்லாம் உழைக்கும். ஆனால் தன்னைப்பார்த்துக்கொள்ளாது. 

போராட்டக்களமாக மாறி நிற்கும் வாழ்க்கை - தீர்வு இருக்கிறதா?  

கும்ப ராசியில் உச்சம் அடையக்கூடிய கிரகமும் இல்லை. நீச்சம் அடையக்கூடிய கிரகமும் இல்லை. ஆகையால், வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பது ரீதியாக, சராசரியாக வாழ்க்கை சென்று கொண்டே இருக்கும். அதனுடன் தற்போது ஜென்ம சனியும் சேர்ந்து இருக்கிறது. ஆகையால் வாழ்க்கையே ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது. 

செல்ல வேண்டிய முக்கிய மூன்று கோயிகள் - சனிக்கிழமையன்று அங்கு இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள்.

இதற்கு தீர்வு இருக்கிறதா எனபதுதான் தற்போது பெரும்பான்மையானோரின் கேள்வியாக இருக்கிறது. ஆம், தீர்வு இருக்கிறது. கும்பகோணத்தின் நகர் மத்தியில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள் மூன்றே கோயில்கள்தான். சனிக்கிழமையன்று அங்கு இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள். 

வஸ்திரம் சாத்தி, கற்பககிரகத்தில் எரியும் விளக்குகளுக்கு நெய் தீபம் வாங்கி கொடுங்கள்.

அங்கு 11 விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். மேலும், சாமிக்கு வஸ்திரம் சாத்தி, கற்பககிரகத்தில் எரியும் விளக்குகளுக்கு நெய் தீபம் வாங்கி கொடுங்கள். அங்கிருக்கும் குருக்களை, உங்கள் கண்முன்னே அந்த நெய்யை விளக்கில் ஏற்ற சொல்லுங்கள். சனிக்கிழமை முடியவில்லை என்றால், ஞாயிற்றுக்கிழமை செல்லுங்கள். அதைதொடர்ந்து காசி விஸ்வநாதர், வீரபத்திரர் சுவாமி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால், உங்களுக்கு அப்படிப்பட்ட விமோசனம் கிடைக்கும்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: