கொட்டி விளையாட வரும் சுக்கிரன்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. இனி ஜாலியான அதிர்ஷ்டம் தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டி விளையாட வரும் சுக்கிரன்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. இனி ஜாலியான அதிர்ஷ்டம் தான்!

கொட்டி விளையாட வரும் சுக்கிரன்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. இனி ஜாலியான அதிர்ஷ்டம் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 09, 2025 01:37 PM IST

சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கொட்டி விளையாட வரும் சுக்கிரன்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. இனி ஜாலியான அதிர்ஷ்டம் தான்!
கொட்டி விளையாட வரும் சுக்கிரன்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. இனி ஜாலியான அதிர்ஷ்டம் தான்!

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சுக்கிரன் வருகின்றமே பதினாறாம் தேதி என்று ரேவதி நட்சத்திரத்தில் நுழையுள்ளார். இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் 11வது வீட்டில் சுக்கிரன் இருக்கின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் இருக்கின்றார். அதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கலை துறையில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வெற்றிகள் உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணித்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner