மகர ராசிகளுக்கு புது வீடு கட்ட ராசி வந்தாச்சு! சங்கடம் தீர்க்கும் சனி பெயர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகர ராசிகளுக்கு புது வீடு கட்ட ராசி வந்தாச்சு! சங்கடம் தீர்க்கும் சனி பெயர்ச்சி!

மகர ராசிகளுக்கு புது வீடு கட்ட ராசி வந்தாச்சு! சங்கடம் தீர்க்கும் சனி பெயர்ச்சி!

Suguna Devi P HT Tamil
Published Oct 30, 2024 03:06 PM IST

கிரகங்களின் தலைமை கிரகமாகவும் எதிர் மறை மற்றும் நேர்மறை பலன்களை தரக்கூடிய கிரகமாக சனி உள்ளது. சனீஸ்வரன் ஒரு நியாயதிபதி தவறு செய்பவர்களுக்கு தக்க பதிலடியைக் கொடுக்கும் கிரகமாக இருந்து வருகிறது. ஏழரை சனியால் ராஜாவும் ஆண்டியாவன். அந்த அளவிற்கு மிகுந்த தாக்கத்தை சனீஸ்வரர் வழங்குகிறார்.

மகர ராசிகளுக்கு புது வீடு கட்ட ராசி வந்தாச்சு! சங்கடம் தீர்க்கும் சனி பெயர்ச்சி!
மகர ராசிகளுக்கு புது வீடு கட்ட ராசி வந்தாச்சு! சங்கடம் தீர்க்கும் சனி பெயர்ச்சி!

இது போன்ற போட்டோக்கள்

சனியே கர்ம பகவான் 

சனி பகவானே சூரிய குடும்பத்தில் கடைசி கிரகமாக உள்ளார். வாயு கிரகமான சனி பகவான் கர்ம காரகன் ஆவார். தொழில் மற்றும் ஆயுள்காரகன் ஆக உள்ள சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்யக்கூடியவர் ஆவார். மனித வாழ்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகம் ஆவார்.

சனி பகவான் மூலம் தரும் அழியா சொத்தாக நிலைத்து இருக்கும். பிறப்பு ஜாதகத்தில் சனி பகவான் சுபர் பார்வை, சுபர் சேர்க்கை, சனி பகவானுக்கு இருபுறமும் சுப கிரகம் அல்லது சனி நின்ற ராசியில் அடுத்த ராசியில் சுப கிரகம் இருப்பது வாழ்கையில் நன்மைகளை ஏற்படுத்தி தரும்.

வீடு வாங்கும் யோகம் 

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சனி மீனம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். குறிப்பாக இது மகர ராசிக்கு மூன்றாவது இடமாகும். இது எதிர்பாரா யோகத்தை அள்ளிக் கொடுக்கும் ஸ்தானமாகும். மேலும் மகர ராசியின் அதிபதியாகவும் சனி இருநந்து வருகிறார். இதனால் பரம்பரை சொத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கி, புது வீடு கட்டும் யோகம் வரும். குறிப்பாக சனி 3,6,11 ஆகிய இடங்களில் இருக்கும் போது ராசிக்கு ராஜ யோகம் கூடி வரும் என்பது நம்பிக்கை.

மன உறுதி நிறைந்த மகர ராசியினர்

மகரம் ராசிக்குள் செவ்வாய் உச்சம் பெறுவதால் அடிக்கடி கோபப்படும் குணம் இவர்களுக்கு உண்டு. குரு பகவான் மகரம் ராசியில் நீசம் பெறுவதால் இவர்களுக்கு பணத்தின் அருமை தெரியாது. பணத்தின் அருமை எப்போது தெரிகிறதோ அப்போது முதல் வாழ்கையில் முன்னேற்றம் தொடங்கும் காலமாக இருக்கும். ஏழரை சனியால் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் மன உறுதியுடன் கடந்து வந்திருப்பார்கள். 

2025 ஆம் ஆண்டு முதல் மகர ராசிக்கு ஏழரை சனி முழுமையாக விளங்குகின்றது. சனி பகவான் மூன்றாம் இடமான மீனம் ராசியில் அமர்கிறார். இந்த நிலையில் சனி பகவான் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் தருவார்.

2020-2023ஆம் காலகட்டத்தில் பெரிய கஷ்டங்களை மகரம் ராசிக்காரர்கள் அனுபவித்து இருக்க நேரிட்டு இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவ பாடங்கள் இவர்களுக்கு கிடைத்து இருக்கும். தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இந்த காலம் இருந்து இருக்கும்.

எல்லா கஷ்டங்களும் தீரும்!

இனி எல்லா கஷ்டங்களும் தீரும் காலமாக சனி பெயர்ச்சிக்கு பிந்தைய காலம் விளங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவது, வேலையை இழந்தவர்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பது உறுதி. 

3ஆம் இடத்தில் அமரும் சனி பகவான் மூலம் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தைரியம், வெற்றி, ஆபரணம், முயற்சியை குறிக்கும் இடமாக இவைகள் விளங்குகின்றது. மனதில் தைரியம் பிறக்கும், முயற்சிகள் கைக்கூடும். போட்டித் தேர்வுகள் எழுதக்கூடியவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.