Money Luck: செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும் சங்கு பூ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும் சங்கு பூ!

Money Luck: செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும் சங்கு பூ!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 15, 2024 11:00 PM IST

நீல நிறத்தில் இருக்கும் சங்கு பூ வீட்டில் வைத்தால் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும். செல்வ செழிப்பு பெறவும், புகழ் கிடைக்கவும் இந்த பூக்களை பூஜையில் பயன்படுத்தினால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்கவும் செய்யும் சங்கு பூ
செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்கவும் செய்யும் சங்கு பூ

இது போன்ற போட்டோக்கள்

பணம் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க வாஸ்து மற்றும் ஜோதிடம் பல வழிகளை கூறுகிறது. அதில் ஒன்றாக இந்த சங்கு பூ செடியை வீட்டில் நடுவது. விஷ்ணு காண்ட மலர் என்றும் அழைக்கப்படும் இந்த செடி வீட்டில் இருந்தால் பணம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த செடியை நம் வீட்டில் நட்டு வளர்ப்பதால் அன்னை லட்சுமி தேவியின் அருட் பார்வை கிடைக்கும், நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் எனவும் சொல்லப்படுகிறது

பூக்கள் இல்லாமல் பூஜை முழுமையடையாது. லட்சுமி தேவியை அனைவரும் வழிபடுகிறார்கள். ஏனெனில் லட்சுமி தேவியின் அருள் இருந்தால் வீடு மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும். பூஜையின் போது சங்கு பூ வைப்பது மங்களகரமானது.

இந்த செடியை வீட்டில் வைத்திருந்தால் முன்னேற்றம் ஏற்படும். விஷ்ணுவுக்கும் சனீஸ்வரருக்கும் சங்கு மலர்கள் மிகவும் பிடிக்கும். இந்த பூ தொடர்பான சில பரிகாரங்களை பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவை ஏற்படும். பணப்புழக்கம் வீட்டில் இருக்கும்.

சனி பகவானுக்கு பிரசாதம்

சனி பகவானுக்கு நீல நிறத்தில் இருக்கும் இந்த சங்கு பூவை சமர்பிப்பது அவரது அருளைப் பெறுவதாகும். சனிக்கிழமை அன்று சனீஸ்வரருக்கு சங்கு பூ மலர்களால் ஆன மலர் மாலையை அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் சனி பகவான் மகிழ்ச்சியடைந்து உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவார்.

பணம் பற்றாக்குறையை போக்கும்

பணம் வைக்கும் இடத்தில் சங்குப் பூக்களை வைப்பதால் பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். இந்த மலர்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். நீல நிற பூக்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய்கிழமை அன்று அனுமனுக்கு சங்கு மலர்களை வைத்து வழிபட வேண்டும். பின்னர் அவை உங்கள் பணப்பையில் அல்லது பணம் சேமிப்பு பகுதியில் வைக்கப்படலாம். இப்படி செய்தால் பணத்தட்டுப்பாடு தீரும்.

சிவலிங்கத்துக்கு பிரசாதம்

திங்கள்கிழமைகளில் சிவலிங்கத்தை வழிபடும் போது சங்கு மலர்களை அர்ச்சிக்க வேண்டும் . இவ்வாறு செய்வதால் சிவன் அருள் கிடைக்கும். அது மட்டுமின்றி திங்கள்கிழமைகளில் ஐந்து சங்கு பூக்களை ஓடும் நீரில் அல்லது ஆற்றில் வீச வேண்டும். இப்படி செய்தாலும் பண பிரச்னைகள் நீங்கும். நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை போக்க உதவும்

வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம், கடுமையான பிரச்னைகளை உண்டாக்கினால், இந்த பரிகாரத்தை சங்கு பூ வைத்து முயற்சிக்கவும். 

ஏழு சங்கு பூக்களை எடுத்து கங்கை நீரால் கழுவி மஞ்சள் துணியில் போடவும். அவற்றை வியாபாரம் செய்யும் கடையிலோ அல்லது பணப்பெட்டியிலோ வைத்துக் கொள்ளவும். இப்படி செய்தால் வியாபார நஷ்டத்தில் இருந்து விடுபடலாம்.

ஆசைகள் நிறைவேறும்

நீண்ட நாட்களாக உங்கள் விருப்பங்கள் நிறைவேறாமல் இருந்தால், சங்கு பூக்களை அனுமனின் பாதத்தில் அர்ச்சித்து பூஜை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பண பிரச்னைகள் தீரும். உங்கள் ஆசை நிறைவேறும். 

மேலும் இந்த மலர்களால் செய்யப்பட்ட மாலையை துர்கா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு அர்ப்பணிக்கலாம். இந்த பூக்களில் சிலவற்றை உங்கள் வீட்டின் மூலையில் வைப்பது எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும்

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.