Pongal Festival 2025: போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை.. வரலாற்று முக்கியத்துவம் என்ன? - விபரம் இதோ!
Pongal Festival 2025: தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு.

Pongal Festival 2025: பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் ஒவ்வொரு விழாக்களும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சார தொடர்புகளின் அடையாளமாக கருதப்படுகிறது தைப் பொங்கல். தமிழர் திருநாளான பொங்கல் விழா நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் விழா இன்று (ஜனவரி 13) போகிப் பண்டிகையுடன் தொடங்கி இருக்கிறது. நாளை தைப்பொங்கல் (ஜன.14), நாளை மறுநாள் மாட்டுப் பொங்கல் (ஜன.15), காணும் பொங்கல் ஜனவரி 16 அன்று கொண்டாடப்படுகிறது. இனி தைப் பொங்கலின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
"அறுவடை மாதம்"
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பழமொழி. தை மாதம் தொடங்கினாலே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும். தை மாதத்தின் தொடக்கமே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது "அறுவடை மாதம்" என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர்
தைப்பொங்கல் என்பது நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமான பண்டிகையாகும். குறிப்பாக விவசாயத்திற்கு எதெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறி வணங்குவது இதன் சிறப்பம்சமாகும். இது "அறுவடை திருவிழா" எனவும் அழைக்கப்படுகிறது. இது மகர சங்கராந்தியுடன் தொடர்புடையது மற்றும் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தை பொங்கல் அன்று சூரியனை வணங்கிப் பொங்கலிட்டு கரும்பு, பழங்கள், காய்கறிகள், வெற்றிலை, பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும். வீட்டில் சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்பு.