Karthigai Deepam 2022: திருப்பரங்குன்றம் கார்த்திகேயனுக்குப் பட்டாபிஷேகம்!
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருக்கார்த்திகை திருநாள் எந்த அளவிற்கு அண்ணாமலையாருக்கு எந்த அளவிற்கு விசேஷமோ அதே அளவிற்கு கார்த்திகை பெருமானாகிய முருகப் பெருமானுக்கும் விசேஷமாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
திருக்கார்த்திகை திருநாள் அன்று உலகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா, தெப்பத் திருவிழா, பங்குனி பெருவிழா என மூன்று திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் நடக்கும்.
இந்த மூன்று திருவிழாக்களிலும் கார்த்திகேயனுக்குப் பட்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் திருக்கார்த்திகை திருநாளில் முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
முருகப் பெருமான் தெய்வானையுடன் நேற்று எழுந்தருளினார். மேலும் அக்னியாகம் வளர்க்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது முருகப்பெருமானுக்கு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோலும், தங்கத்தில் செய்யப்பட்ட கிரீடமும் சாற்றப்பட்டது.