சனி.. சுக்கிரன்.. சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் ரெடி.. யோகராசிக்காரர்கள் யார்?
Money Luck: தந்தை மகன் உறவாக இருந்தாலும் சனி, சூரியன் எதிரி கிரகங்களாகவே ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகின்றனர். இருப்பினும் இவர்கள் இருவரோடு சேர்த்து தற்போது சுக்கிர பகவானும் என்று சேர்ந்துள்ளார். மூன்று கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். ஒவ்வொரு மாதமும் தனது இடத்தை சூரிய பகவான் மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
Mar 14, 2025 05:08 PMமீனத்தில் உருவாகும் புதன் - சுக்கிரன் சேர்க்கை.. நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய கர்மநாயகன் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதிலும் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சூரிய பகவான் மார்ச் 15 ஆம் தேதியான இன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்பத்தில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது சனி பகவானும் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: சனியை பாய்ந்து பிடித்த செவ்வாய்.. கும்பத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. சிக்கல்கள் யாருக்கு?.. வாங்க பார்க்கலாம்
தந்தை மகன் உறவாக இருந்தாலும் சனி மற்றும் சூரியன் எதிரி கிரகங்களாகவே ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகின்றனர். இருப்பினும் இவர்கள் இருவரோடு சேர்த்து தற்போது சுக்கிர பகவானும் என்று சேர்ந்துள்ளார். மூன்று கிரகங்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசி
உங்களுடைய ராசியில் முதல் வீட்டில் சூரியன் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வம் பெருகும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் சுக்கிரன் சனி மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பல நல்ல செய்திகளை உங்களை தேடி வரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பெற்றோர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் சனி மற்றும் சுக்கிரன் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையு.ம் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
