ஜொலிக்கப் போகும் 3 ராசிகள்.. ராகு 2025 வேட்டை ஆரம்பம்.. பணத்தோடு விளையாடு.. பொருளாதாரத்தில் முன்னேற்றம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜொலிக்கப் போகும் 3 ராசிகள்.. ராகு 2025 வேட்டை ஆரம்பம்.. பணத்தோடு விளையாடு.. பொருளாதாரத்தில் முன்னேற்றம்

ஜொலிக்கப் போகும் 3 ராசிகள்.. ராகு 2025 வேட்டை ஆரம்பம்.. பணத்தோடு விளையாடு.. பொருளாதாரத்தில் முன்னேற்றம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Dec 24, 2024 05:37 PM IST

Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாய மனைத்துராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜொலிக்கப் போகும் 3 ராசிகள்.. ராகு 2025 வேட்டை ஆரம்பம்.. பணத்தோடு விளையாடு.. பொருளாதாரத்தில் முன்னேற்றம்
ஜொலிக்கப் போகும் 3 ராசிகள்.. ராகு 2025 வேட்டை ஆரம்பம்.. பணத்தோடு விளையாடு.. பொருளாதாரத்தில் முன்னேற்றம்

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். ராகு பகவானின் மீன ராசி பயணம் இந்த 2024 ஆண்டு முழுவதும் இருக்கும். வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு கும்பராசிக்கு செல்கிறார் இது சனிபகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாய மனைத்துராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது வருமானம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

புதிய முதலீடுகள் உங்களுக்கு சொத்துகளை சேர்க்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும்.

மகர ராசி

வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பான நற்பலன்களை ராகு பகவான் கொடுக்கப் போகின்றார். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். துன்பங்கள் குறைந்து நன்மைகள் உங்களுக்கு அதிகரிக்கும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றியடையும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் முன்னேற்றம் அடையும். 

பணவரவில் அந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் .காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

ரிஷப ராசி

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பண யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. ராகு பகவான் கர்ம நிலையில் பயணத்தை தொடங்குகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

புதிய தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.