2025 தொடக்கத்திலேயே சுக்கிர பெயர்ச்சி.. மாளவ்யா யோகத்தில் குதிக்கும் 3 ராசிகள்.. பணம் கொட்ட போகுது!
Lord Venus: சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ராஜ யோகம் உருவாகியுள்ளது. இதனுடைய பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சுக்கிர பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீன ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ராஜ யோகம் உருவாகியுள்ளது. இதனுடைய பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
சுக்கிரனின் மீன ராசி பயணம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு யோசித்து கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
குழந்தைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
மீன ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். எதனால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது. 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். சுக்கிர பகவானால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நுழைகின்றார். இதனால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வீட்டிற்கு ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வருமானத்தில் உயர்வு இருக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு சிறப்பான வேலை கிடைக்க கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.