2025 முழுவதும் செவ்வாய் ஆட்சி.. பணத்தை அள்ளிக்கொள்ள போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 முழுவதும் செவ்வாய் ஆட்சி.. பணத்தை அள்ளிக்கொள்ள போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

2025 முழுவதும் செவ்வாய் ஆட்சி.. பணத்தை அள்ளிக்கொள்ள போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jan 03, 2025 05:02 PM IST

Lord Mars: எண் கணிதத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் எண்ணானது ஒன்பது ஆகும் அதன் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இதன் காரணமாக இந்த 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் பகவானின் ஆதரவை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

2025 முழுவதும் செவ்வாய் ஆட்சி.. பணத்தை அள்ளிக்கொள்ள போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!
2025 முழுவதும் செவ்வாய் ஆட்சி.. பணத்தை அள்ளிக்கொள்ள போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

இது போன்ற போட்டோக்கள்

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த 2025 ஆம் ஆண்டு மிகப் பெரிய முக்கிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றன.

அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆட்சி செய்யப் போகின்றார். எண் கணிதத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் எண்ணானது ஒன்பது ஆகும் அதன் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இதன் காரணமாக இந்த 2025 ஆம் ஆண்டில் செவ்வாய் பகவானின் ஆதரவை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மேஷ ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். செவ்வாய் பகவான் உங்கள் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். முக்கிய விஷயங்களில் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். 

நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும்.

கடக ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவானால் உங்களுக்கு அற்புதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசியில் தற்போது செவ்வாய் பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். 

இந்த ஆண்டில் செய்யப்படும் முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பங்குச் சந்தை முதலீடுகளும் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆசிர்வாதத்தை கொடுத்துள்ளார். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக இது அமையும். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

நீண்ட நாள் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். பண சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.