செவ்வாய் புதன் சேர்க்கை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பணமழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  செவ்வாய் புதன் சேர்க்கை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பணமழை

செவ்வாய் புதன் சேர்க்கை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 06, 2024 04:51 PM IST

செவ்வாய் மற்றும் புதன் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

செவ்வாய் புதன்
செவ்வாய் புதன்

இது போன்ற போட்டோக்கள்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் தற்போது செவ்வாய் பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, கல்வி, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இருப்பிடம் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது சனி பகவானின் மகர ராசியில் செவ்வாய் மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேர்ந்துள்ளனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம் ராசி

 

புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்ந்துள்ளனர். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

Whats_app_banner