Arthakendra Yoga: பொங்கல் திருநாளில் அர்த்தகேந்திர யோகம்.. எழுந்து நின்று பணத்தை அள்ளும் 3 ராசிகள்.. வாழ்க்கை மலரும்!
Arthakendra Yoga: 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை திருநாளான ஜனவரி 14-ம் தேதி அன்று குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றனர்.
Arthakendra Yoga: நவகிரகங்களில் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் மிகவும் முக்கிய கிரகங்களாக இருந்து வருகின்றனர். நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர். குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை திருநாளான ஜனவரி 14-ம் தேதி அன்று குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கானலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் அர்த்தகேந்திர யோகத்தின் தாக்கம் இருக்க போகின்றது. இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எடுத்துக் கொண்டு வேலைகளில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசி
அர்த்தகேந்திர யோகத்தால் உங்களுக்கு நல்ல யோகம் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி ஆகாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குருபகவானின் அருளால் உங்களுக்கு புதிய யோகம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தின் அவரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கும்ப ராசி
அர்த்தகேந்திர யோகத்தால் உங்களுக்கு நல்ல பண வரவு கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு முன்னேற்றம் கொடுப்பார்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.