கொண்டாட்டத்தோடு வரும் குரு.. வருமானத்தை பெருக்கும் 3 ராசிகள்.. கஷ்டம் பறந்து போவது எப்போது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொண்டாட்டத்தோடு வரும் குரு.. வருமானத்தை பெருக்கும் 3 ராசிகள்.. கஷ்டம் பறந்து போவது எப்போது?

கொண்டாட்டத்தோடு வரும் குரு.. வருமானத்தை பெருக்கும் 3 ராசிகள்.. கஷ்டம் பறந்து போவது எப்போது?

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 20, 2024 04:48 PM IST

Guru Bhagavan: குருபகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கொண்டாட்டத்தோடு வரும் குரு.. வருமானத்தை பெருக்கும் 3 ராசிகள்.. கஷ்டம் பறந்து போவது எப்போது?
கொண்டாட்டத்தோடு வரும் குரு.. வருமானத்தை பெருக்கும் 3 ராசிகள்.. கஷ்டம் பறந்து போவது எப்போது?

அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருபகவான் தனுசு ராசி மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குருபகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர இல்லை அடைந்துள்ளார். இதனால் உங்கள் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தனிப்பட்ட மரியாதை கிடைக்க கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரல் திருமணம் கைகூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிரன் இல்லை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கப்போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் 11 ஆவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீண்ட நாள் ஆசிகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner