Lord Budhan: லாட்டரி அடித்த ராசிகள்.. பம்பர் பரிசு கொடுக்கும் புதன்.. பொட்டிய தயாரா வச்சுக்கோங்க மக்களே!
Lord Budhan: புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Budhan: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் புதன் பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார்.
புதன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் இருந்து அதிர்ஷ்டம் தொடங்க போகின்றது. தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியின் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பயணம் தொடங்குகிறது. இதனால் இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும். உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கப்போகின்றது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களை தேடி வரும். புதிய வேலையை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த கால கட்டம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். என் நண்பர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணத்தை தொடங்குகின்றார். இதனால் உங்களுக்கு பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவு அதிகரிக்கப்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு நல்ல பலன்களை உங்களுக்குப் பெற்று தரும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். தொழிலை தொடங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். காதல் உறவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியில் ஏற்படுத்தும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு பிறகு திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியில் நிலைத்து நிற்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.