ஆமை அவதாரத்தில் ஆணவம் கொண்ட விஷ்ணு பகவான்.. பாடம் புகட்டிய கச்சபேஸ்வரர்.. காஞ்சிபுரம் திருக்கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆமை அவதாரத்தில் ஆணவம் கொண்ட விஷ்ணு பகவான்.. பாடம் புகட்டிய கச்சபேஸ்வரர்.. காஞ்சிபுரம் திருக்கோயில்!

ஆமை அவதாரத்தில் ஆணவம் கொண்ட விஷ்ணு பகவான்.. பாடம் புகட்டிய கச்சபேஸ்வரர்.. காஞ்சிபுரம் திருக்கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 08, 2025 06:00 AM IST

காஞ்சிபுரத்தில் பல சிறப்பு மிகுந்த கோயில்கள் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கச்சபேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் தலவிருட்சமாக முருக்கடி மரம் திகழ்ந்து வருகின்றது. இந்த திருக்கோயில் கச்சபேசம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

ஆமை அவதாரத்தில் ஆணவம் கொண்ட விஷ்ணு பகவான்.. பாடம் புகட்டிய கச்சபேஸ்வரர்.. காஞ்சிபுரம் திருக்கோயில்!
ஆமை அவதாரத்தில் ஆணவம் கொண்ட விஷ்ணு பகவான்.. பாடம் புகட்டிய கச்சபேஸ்வரர்.. காஞ்சிபுரம் திருக்கோயில்!

இது போன்ற போட்டோக்கள்

குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட கோயில்கள் இன்று வரை பல வரலாறுகளை சுமந்து கொண்டு சிறப்புடன் காணப்படுகின்றன. சில மன்னர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையே கோயில் நகரமாக மாற்றி இருந்துள்ளனர். அப்படிப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாநகரமானது விஷ்ணு காஞ்சி, சிவகாஞ்சி என்ற இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் ஏதேனும் ஒரு கோயில் கோபுரத்தை பார்த்து விட முடியும். அதன் காரணமாகவே அது கோயில் நகரமாக கருதப்படுகிறது. அங்கு இருக்கக்கூடிய கோயில்களை பார்ப்பதற்காகவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் பல சிறப்பு மிகுந்த கோயில்கள் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் கச்சபேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் தலவிருட்சமாக முருக்கடி மரம் திகழ்ந்து வருகின்றது. இந்த திருக்கோயில் கச்சபேசம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

இந்த கோயில் பற்றி கிபி ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தல வரலாறு

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுப்பதற்காக வாசுகி பாம்பும் மத்தாக மந்திரம் மலையும் பயன்படுத்தப்பட்டன. அப்போது மந்திர மழை கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் அமிர்தம் கிடைக்காமல் பணி தடைபடும் என்ற அச்சத்தில் விஷ்ணு பகவான் ஆமை அவதாரம் எடுத்தார்.

மந்திர மலையை தாங்கி பிடித்து அடியில் நின்றார் மகாவிஷ்ணு. பணி நிறைவடைய மகாவிஷ்ணு ஆமை வடிவத்தில் அவதாரம் எடுத்து மிகப்பெரிய உதவியை புரிந்தார். அதன் காரணமாக விஷ்ணு பகவானுக்கு செருக்கு உண்டானதாக கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு உலகமே அழியும் வகையில் கடலை ஆமை அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் கலக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் ஆமையின் ஓட்டினை எடுத்து மறைத்து வைத்துள்ளார். அதற்குப் பிறகு ஆமை அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் தனது தவறை உணர்ந்துள்ளார். அதற்குப் பிறகு இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை ஆமை அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் வழிபட்டுள்ளார்.

அதன் காரணமாகவே இங்கு வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமான் கச்சபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆமை வடிவத்தில் இருக்கக்கூடிய விஷ்ணு பகவான் வழிபட்டதால் இந்த திருநாமம் கொடுக்கப்பட்டுள்ளது.

தல சிறப்பு

வடக்கு நோக்கி ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் இந்த கோயிலில் காணப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவலிங்கம் ஆமை, நாகம், தாமரை, சிம்மம், யுகங்கள் ஆகிய ஐந்து ஆசனங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காலத்தில் சிவபெருமான் காட்சி கொடுப்பது மிகவும் அரிதாகும்.

ஒரே கோயில் வளாகத்தில் இரண்டு சிவன் கோயில்கள் இருப்பது இதற்கு தனி சிறப்பாகும். இந்த கோயிலில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவ திருவிழா மிகவும் முக்கிய திருவிழாவாகக் கூறப்படுகிறது. கார்த்திகை மாதங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடை ஞாயிறு என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினங்களில் மண்டை விளக்கு ஏற்றி கோயிலை சுற்றி வந்தால் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.

அமைவிடம்

காஞ்சிபுரத்தில் நெல்லுக்கார தெரு பகுதியில் இந்த கச்சபேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது