புலியாக மாறிய சிவபெருமான்.. வில்வ இலையால் அபிஷேகம் செய்த வேடன்.. மகா சிவராத்திரி பிறந்த கோயில்!
சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் திருநாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகின்றது. இந்த மகா சிவராத்திரி திருநாள் பிறந்த இடமாக இந்த திருவைக்காவூர் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில்விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வானுயர்ந்த கம்பீரமாக காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தலபுராணம் இருக்கின்றது. அதனைப் பொருத்தே அந்த கோயில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
அந்த வகையில் அனைத்து கோயில்களும் சிறப்பு மிகுந்த கோயில்களாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருவைக்காவூர் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில்.
சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் திருநாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகின்றது. இந்த மகா சிவராத்திரி திருநாள் பிறந்த இடமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.
மேலும் படிங்க| ராகு பகவானின் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள்
மகா சிவராத்திரி புராணங்கள்
பாற்கடலில் பெருக்கெடுத்து ஓடிய நஞ்சை சிவபெருமான் உண்டதால் கண்டம் கருத்து போனது. அதனால அவர் நீலகண்டன் என்ற திருநாமத்தை பெற்றார் அந்த நாள்தான் மகா சிவராத்திரி திருநாள் என கூறப்படுகிறது.
சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி மூடியதால் உலகம் இருளில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தேவர்கள் வேண்டிக் கொண்ட காரணத்தினால் சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்தார் அந்த திருநாள் மகாசிவராத்திரி என்று கூறப்படுகிறது.
உலகம் அழிந்த பிறகு அனைத்தும் சிவபெருமானிடம் ஒடுங்கி கிடந்த காலகட்டத்தில் அடர்ந்த இருளில் நான்கு காலமும் ஆகமும் முறைப்படி பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டுள்ளார் அதன் நினைவாக சிவராத்திரி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
இதுபோல சிவராத்திரிக்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. அதுபோல தற்போது வில்வவனேஸ்வரர் திருக்கோயிலும் ஒரு தலபுராணம் கூறப்படுகிறது.
மேலும் படிங்க| கேது பகவானின் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள்
வில்வவனேஸ்வரர் திருக்கோயில்
திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவபெருமான் கோயிலாகும். இந்த திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்கு இது மிகவும் சிறப்புடைய தலமாக கருதப்படுகிறது.
தல புராணம்
ஒருமுறை தவநிதி முனிவர் திருவைகாவூர் கோயிலில் அமர்ந்து வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த காட்டுப்பகுதியில் மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் மானை துரத்தி வந்தான். தப்பித்துச் சென்ற மான் ஆலயத்திற்குள் இருந்த தவநிதி முனிவரை தஞ்சம் அடைந்தது. முனிவரும் அந்த மானுக்கு அபயம் கொடுத்து தஞ்சம் அளித்தார். இதனால் கோபமடைந்த வேடன் முனிவரை தாக்கம் என்றான். பக்தனின் துயரை நீக்குவதற்காக சிவபெருமான் புலி உருவம் கொண்டு வேடனை துரத்தினார்.
புலியை கண்டு அஞ்சி ஓடிய வேடன் அருகில் இருந்த மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டான். வேறு வழி இன்றி மரத்தின் மீது இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கலைப்பினால் வேடனுக்கு தூக்கம் ஏற்பட்டது. தூங்கினால் புலி நம்மை கொன்றுவிடும் என்று நினைத்த வேடன், மரத்திலிருந்து இலைகளை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டுள்ளார்.
அன்று இரவு மகா சிவராத்திரி திருநாளாக இருந்தது. வேடன் பறித்து போட்ட இலைகள் அனைத்தும் புலி வடிவில் இருந்து சிவபெருமான் மீது அர்ச்சனை மலர்களாக விழுந்தது. தூக்கம் இல்லாமல் சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இறைவன் வேடனுக்கு மோட்சம் அளித்து அருள் வழங்கினார். இதனை நினைவு கூறும் விதமாகவே மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சனி பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
எமன் துரத்திய நிகழ்வு
விடிந்து விட்ட காரணத்தினால் வேடனின் ஆயுள் காலம் முடிந்தது எனக் கூறி, அவனது உயிரை பறிப்பதற்காக எமன் கோயிலுக்குள் நுழைந்துள்ளார். நந்தி பெருமான் தடுத்தும் எமன் கேட்கவில்லை, உள்ளே புகுந்துள்ளார். உடனே சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவேல் தோன்றி கையில் இருந்த கோலை வைத்து எமனை அடித்து விரட்டி உள்ளார்.
அதற்குப் பின்னரும் எமன் கைவிடாமல் உள்ளே நுழைய முற்பட்டு உள்ளார். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான நந்தி, தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தி உள்ளது.
இதனை நினைவு கூறும் விதமாக இந்த கோயிலில் நந்தி வாசலை நோக்கியவாறு காட்சி கொடுக்கின்றது. தட்சணாமூர்த்தி கையில் கோல் ஏந்தியபடி காட்சி கொடுத்து வருகிறார். பிரம்மன் மற்றும் அக்கினி இருவரும் இந்த தளத்தில் தீர்த்தம் அமைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. மகா சிவராத்திரி திருநாளில் நான்காம் நாள் ஜாமத்தில் வேடனுக்கு இறைவன் காட்சி தரும் புறப்பாடு நிகழ்த்தப்படுகிறது.
