Lord Guru Venus: குரு சுக்கிரன் நண்பர்களாக சேர்ந்தனர்.. தலைக்கு மேல் கொட்டும் பணம்.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளை தேடி வருது
Lord Guru Venus: ரிஷபத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் சேர்ந்துள்ளார். குரு சுக்கிரன் இருவரும் பயணம் செய்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதனை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

Lord Guru Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு, ஈர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Feb 17, 2025 01:56 PMSukra Bhagavan: கொட்டி கொடுக்கும் சுக்கிரன் பகவான்.. மார்ச் மாதம் முதல் எந்த மூன்று ராசிக்கு யோகம் கிடைக்கும்?
Feb 17, 2025 05:00 AMToday Rasipalan : 'மகிழ்ச்சியா இருங்க.. உழைப்பு வீண் போகாது.. நம்பிக்கை முக்கியம்' இன்று பிப்ரவரி 17 ராசிபலன் இதோ!
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். தேவர்களில் குருவாக திகழ்ந்து வரக்கூடிய இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் மற்றும் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது வெகு விமர்சையாக அனைத்து குரு பகவானின் கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று தனக்கு சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் புகுந்தார்.
இந்நிலையில் ஏற்கனவே ரிஷபத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் சேர்ந்துள்ளார். குரு சுக்கிரன் இருவரும் பயணம் செய்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதனை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி
உங்கள் ராசிகள் திரிகோண ராஜயோகம் மிகவும் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் சிறப்பான மரியாதை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியமான காலகட்டத்தில் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
கடக ராசி
உங்கள் ராசிகள் தெரிவிக்கவும் சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அதனை முடிப்பதற்கான தைரியம் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை இதுவரைக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தூதுவரும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் திரிகோண ராஜயோகம் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எந்த வேலையை தொடங்கினாலும் உங்களுக்கு வெற்றியை தருவதற்காக வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். மற்றவர்களிடத்தில் பாராட்டுகளை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
குடும்பத்தில் போதுமான நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய யோசனைகள் உங்களுக்கு கிடைக்கும் நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
