Sani Suriyan: சனியை விடாமல் பிடித்த சூரியன்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை
சூரியன் மற்றும் சனி சேர்க்கை மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். சூரிய பகவான், சனி பகவான் இருவரும் தந்தை மகனாக இருந்தாலும் நவகிரகங்களில் எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றார்கள்.
இந்த இரண்டு கிரகங்களும் சேர்க்கை நடந்தால் அந்த நிகழ்வு 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தனித்தனியாக இடம் மாறினாலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். சேர்ந்தால் உச்சகட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தற்போது சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார்.
சனி மற்றும் சூரியனின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி மற்றும் சூரியன் சேர்க்கை நிகழ உள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் சிறப்பாக நடக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி இணைப்பானது நடக்க உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும் தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். வங்கி இருப்பானது உங்களுக்கு அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9